தமிழகம்

தமிழகம்

மதுரை விமான நிலையத்தில் பண்டிகை தினத்தை முன்னிடு கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு.

மதுரை விமான நிலையத்தில் பண்டிகை தினமான "தீபாவளி திரு நாளையொட்டி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பண்டிகை தினத்தையொட்டி கூடுதல் பயணிகள் வருபை மற்றும் மற்றும் புறப்பாடு அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலைய உள்வளாகம் போடு பாதை மற்றும் சுற்றுப்பாதை | அதிவிரைவு அதிரடிப்படை, ஆகியவை மத்திய தொழில் பாதுகாப்பு பிரிவினர் 3 பிரிவுகளாகவும். வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் போலீஸார் விமான நிலைய வெளி வளாகம், டோல்கேட். வாகனம் நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் மதுரை மாநகர காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் கார்சிலிண்டர் வெடித்த நிகழ்வை தொடர்ந்து போலீஸார், மத்திய தொழில் பாதுகாப்ப படையினர் தீவிர வாகன பரிசோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்...
தமிழகம்

ரூபாய் 3 கோடி 95 லட்சம் செலவில் புதிய யூனியன் அலுவலகம் கட்டும் பணி தீவிரம்- அதற்காக முதல் கட்ட பணிகள் துவக்கம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இயங்கி வந்த கட்டிடம் மிகுந்த பழமையாகவும் , சாலையை விட்டு தரைத்தளம் கீழ்ப்புறம் ஆனதால், அதனை தகர்த்து அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு, தமிழக அரசு சார்பில் ரூபாய் 3 கோடி 95 லட்சம் செலவில் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்காக பழைய கட்டிடத்தை இயந்திரம் வைத்து இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது. தற்சமயம் ரூபாய் 40 லட்சம் செலவில் தற்காலிக கட்டிடம் வைத்து, பொது மக்களின் தேவைக்காக அலுவலக பணிகள் நடைபெற்று வருகிறது. செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்  ...
தமிழகம்

சிவகாசி பகுதியில், தீபாவளி பண்டிகை பொருட்கள் வாங்குவதற்காக கடை வீதிகளில் திரண்ட கூட்டம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வந்த சாரல்மழை காரணமாக நடைபாதை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. மேலும் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள், அச்சகங்கள், சிறிய தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு நேற்று தான் போனஸ் பணம் வழங்கப்பட்டது. போனஸ் பணம் கிடைத்தவுடன் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருக்கு தேவையான புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் தீபாவளி பண்டிகைக்கான பொருட்கள் வாங்குவதற்காக கடை வீதிகளில் திரண்டனர். சிவகாசி நகர் பகுதிகள், புறநகர் பகுதிகள் மற்றும் அருகில் உள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சிவகாசி நகர் பகுதிக்கு பொருட்கள் வாங்குவதற்காக குவிந்தனர். இதனால் சிவகாசி பேருந்து நிலையப்பகுதி, காந்தி சாலை, ஜவுளிக்கடைவீதி, கிழக்கு ரதவீதி, என்ஆர்கேஆர் சாலை, அம்பேத்கர் சிலைப்...
தமிழகம்

பள்ளிக்குள் புகுந்த மழை நீர் . வடிகால் சாக்கடை அமைக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகரில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. அப்போது 18 வது வார்டில் தனியார் உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது....
தமிழகம்

கர்ப்பப்பை வாய் புற்று நோயை பாப்ஸ்மியர் சோதனையில் கண்டறியலாம் மதுரை அப்போலோ மருத்துவர்கள் தகவல்

பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை புற்றுநோய் குறித்து அப்போலோ மருத்துவ குழுவினர்கள் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது: நவீன உலகில் பெண்கள் உடல் நலம் குறித்த அதிக கவனம் இல்லாமல் உள்ளனர். ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு மாரடைப்பினால் வரும் மரண விகிதம் அதிகமாக உள்ளது.  கருப்பை மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இரண்டுக்கும் இடையேயான வேறுபாடுகள் பலருக்கும் தெரிவதில்லை. கர்ப்பை வாய் புற்றுநோயை பாப்ஸ்மியர் சோதனையில் கண்டறியலாம். கருப்பை புற்றுநோய் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படுகிறது, ஆனால் 25% பெண்களுக்கு மாதவிடாய் நிற்பதற்க்கு முன் ஏற்படலாம். பிறப்புறுப்பு இதழ் (வால்வார்) புற்றுநோய் புற்றுநோய் என்பது 0.6% பெண்களுக்கு ஏற்படும் அரிதான புற்றுநோயாகும். 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 4% பெண்களுக்கு வரும் புற்றுநோய். இது பாலியல் ரீதியாக பரவும் வைரஸ். ஒரு பெண்ணுக்கு வெளிப்புற பிறப்புறுப்பில் தொடர்ந்து அரிப்பு, வலி,...
தமிழகம்

பேரையூர் ரோட்டில் அரசு மருத்துவமனையில் ஆலோசனைக் கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 58 கிராம கால்வாய் இளைஞர் சங்கம் தலைவர் சௌந்தரபாண்டியன் கலந்துகொண்டு உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுக்கொலை அதிகம் நடைபெறுவதால் தொட்டில் குழந்தை திட்டத்தை பற்றி விழிப்புணர்வு அதிக அளவில் பொதுமக்களுக்கு வெளிக்கொண்டு வரவேண்டும் ரத்ததான முகாம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கிராமங்கள் மற்றும் கல்லூரியில் நடைபெற வேண்டும். இதற்கு முழு உறுதுணையாக 58 கிராம கால்வாய் இளைஞர் சங்கம் சார்பில் உதவுவதாகவும் தெரிவித்தனர் இந்த கூட்டத்தின் தலைமை மருத்துவர் செவிலியர்கள் காவல்துறையினர் யூனியன் சேர்மன் மற்றும் 58 கிராம இளைஞர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர்: உசிலை சிந்தனியா  ...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் தனது சொந்த செலவில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கணபதி இவர் தீபாவளியை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு தனது சொந்த செலவில் புத்தாடை மற்றும் இனிப்புகள் தீபாவளி பரிசுகள் வழங்கி தூய்மை பணியாளர்களை மெய்சிலிர்க்க வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் தனது சொந்த செலவில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கியிருப்பது தூய்மை பணியாளர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர்: உசிலை சிந்தனியா...
தமிழகம்

உசிலம்பட்டியில் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்களுக்கு நகர மன்ற தலைவர் சகுந்தலா சீருடை வழங்கினார் இதில் நகர மன்ற துணைத் தலைவர் தேன்மொழி பொறுப்பு ஆணையாளர் முத்து சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் சசிகலா மற்றும் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். இதில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கி தீபாவளி பரிசுகளும் நகர மன்ற தலைவர் வழங்கினார். செய்தியாளர்: உசிலை சிந்தனியா...
தமிழகம்

தேவர் குருபூஜைக்கு மக்கள் சென்று வர தனி வழி., முக்கிய பிரமுகர் செல்வதற்கு தனி வழி. மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

சென்னை செல்ல மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். பசும்பொன் தேவர் ஜெயந்தி முன்னேற்பாடுகள் குறித்த கேள்விக்கு.? பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குள் வருவதால் ஏற்பாடுகள் அனைத்தும் சீராக நடைபெற்று வருகிறது மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் திமுக கழகத்தினுடைய தோழர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். தேவரின் தங்க கவசம் அதிமுக தரப்பினராக உள்ளார்கள் என்பது குறித்த கேள்விக்கு.? தேவரின் தங்க கவசம் குறித்த வழக்கு வருகின்ற 26 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் உள்ளது நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கிறதோ அதன்படி நடந்து கொள்வார்கள் அரசாங்கம் நீதிமன்ற உத்தரவின் படி செயல்படும். தேவர் ஜெயந்தி...
தமிழகம்

இராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் துணைத் தலைவர் கவுன்சிலர்கள் புறக்கணிப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார் பட்டி பேரூராட்சியில் திட்டப்படிகள் நடைபெறுவதில் முறையீடு நடைபெறுவதாக தலைவர் மீது குற்றச்சாட்டை துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கடந்த கூட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து உள்ளனர். கூட்டத்தில் நிறைவேற்றி தீர்மானங்களை கவுன்சில் ஒத்துழைப்பு இல்லாமல் மெஜாரிட்டி இல்லாமல் திருமண நிறைவேற்றப்பட்டதால் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் நேற்று கூட்டம் நடைபெற்ற பொழுது தலைவர் உட்பட ஆறு கவுன்சிலர் மட்டுமே கலந்து கொண்டனர் 9 கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். இந்த கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இதில் மூன்று தீர்மானங்கள் நீதிமன்றத்தில் இருப்பதால் அதை நிறைவேற்றக்கூடாது என செயல் அலுவலர் சந்திரகலா தெரிவித்தார் மீது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தலைவர் ஜெயமுருகன் தெரிவித்தார். 9 கவுன்சிலர் புறக்கணித்து நிலையில் தீர்மானங்கள் எப்படி நிறைவேற்றப்படலாம் என்பது சமூக அறிவியல் கேள்விதிட்டப் பணியில்...
1 455 456 457 458 459 545
Page 457 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!