தமிழகம்

தமிழகம்

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் மருதுபாண்டியர் குருபூஜை விழாவிற்கு வருகை தந்த.எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட சமயநல்லூரில் மாமன்னர் மருதுபாண்டியர் குரு பூஜை விழாவிற்கு காளையார் கோவில் செல்வதற்காக வருகை புரிந்த முன்னாள் முதல்வரும் தமிழக எதிர் கட்சி துணை தலைவருமான ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு மதுரை மாநகர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் அதிமுக ஓபிஎஸ் அணியினர் வரவேற்பு கொடுத்தனர். இதில் மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் புறநகர் மாவட்ட செயலாளர் முருகேசன் பாஸ்கரன் மற்றும் அதிமுக ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் உட்பட கட்சியினர் ஏராளமான கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு வரவேற்பு கொடுத்தனர். செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்...
தமிழகம்

தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத ஸ்டாலினுக்கு இல்லை ஓட்டு என்று கூற வேண்டும். முன்னாள் அமைச்சர்.ஆர்.பி.உதயகுமார் . பேச்சு.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம். வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க.சார்பாக 50வது ஆண்டு கட்சி நிறுவன தின பொன் விழா பொதுக்கூட்டம் வாடிப்பட்டி தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில் நடந்தது.  இந்த கூட்டத்திற் கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ., பேசினார் அப்போது அவர் கூறியதாவது:  ஸ்டாலின் அவர்களே வருகிற தேர்தலில் வேட்டு போடும் திருவிழாக்கு நீங்கள் வாழ்த்து சொல்லவில்லை.  அதனால் உங்களுக்கு இல்லை ஒட்டு,  வைக்கிறோம்  வேட்டு என்று கூற வேண்டும். அப்போதுதான் அவருக்கு புத்தி வரும். இது மக்களை முட்டாளாக நினைக்கிற காரணத்தால்தான் ஸ்டாலின் அவர்கள் அரக்க குனத்தோடு அசுரனை அழித்த அந்த நாளிலே உங்களுக்கு வாழ்த்து சொல்லமனம் வரவில்லை. அதற்கு நீங்கள் பாடம் புகட்டினால் தான் வருகிற காலத்தில்...
தமிழகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் கோரிக்கை

தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பஸ் நிலையத்தில் பல மாதங்களாக குடி தண்ணீர் தொட்டிபழுவடைந்துள்ளது.  நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து போக உள்ளது. பெரியகுளம் புதியபேருந்து நிலையத்தில்  குடிதண்ணீர் இல்லாததால் பயணிகள் காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.    நகராட்சி ஆணையரிடம் பலமுறை கூறிய பொது மக்களுக்கு எந்த ஒரு பயனும் கிடைக்கவில்லை. பயணிகள்  அமர்வதற்கு இருக்கைகள் கிடையாது.  வயதானவர்கள் ,ஊனமுற்றவர்கள் கைக்குழந்தையுடன் பலமணிநேரமாக பேருந்து வருவதற்கு நின்று கொண்டே இருக்கிறார்கள்.  நகராட்சி நிர்வாகம் இதைக் கண்டு கொள்வதில்லை. பொதுமக்கள், பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.   உடனடியாக பெரியகுளம் நகராட்சி நிர்வாகமும்.மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து இதற்கொரு தீர்வினை கொடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். செய்தியாளர் : A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில், வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள், தனியார் பார்களை மூடுவதற்கு ஆட்சியர் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் தனியார் பார்கள் அனைத்தும், தேவர் ஜெயந்தி நாளில் தற்காலிகமாக மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 30ம் தேதி (ஞாயிறு கிழமை) பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும், தனியார் பார்களும், 29ம் தேதி (சனி கிழமை) மாலை 6 மணியில் இருந்து, 30ம் தேதி (ஞாயிறு கிழமை) முழுவதுமாக கண்டிப்பாக மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்படும் மதுக்கடைகள் மற்றும் தனியார் பார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. செய்தியாளர்:  வி காளமேகம்...
தமிழகம்

சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் மாமன்னர் மருதுபாண்டியர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை அன்னதானம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அகமுடையார் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாமன்னர் மருதுபாண்டியர் அவர்களின் குருபூஜையை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பொது மக்களுக்கு சர்க்கரைபொங்கல், புளியோதரை உள்ளிட்ட அன்னதானம் நடைபெற்றது. இதில் முள்ளிப்பள்ளம் அகமுடையார் முன்னேற்ற சங்க தலைவர் கிருஷ்ணன்(எ) கிட்டு தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மார்நாட்டான் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் வண்டிக்காரராசு, செயலாளர் தெய்வேந்திரன், பொருளாளர் முத்துக்குமார் ,ஜேசிபி கண்ணன் ,ஜேசிபி கார்த்தி ,மனோகரன் ரவி ,கீரைண்ணன் மற்றும் அகமுடையார் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்...
தமிழகம்

திருக்குறளின் அறத்துப்பாலுக்கு கதையெழுதிய மாணவர்கள்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் 10, 11, 12-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவ-மாணவிகள் திருக்குறளின் அறத்துப்பாலிலுள்ள 38 குறள்களுக்கு, 38 கதைகளை எழுதியுள்ளனர். இப்பள்ளியின் முதுகலை தமிழாசிரியர் கோ.மாலினி, இக்கதைகளைத் தொகுத்து ‘திருக்குறள் அறத்துப்பால் கதைகள்' எனும் நூலாக்கியுள்ளார். இந்நூலின் அட்டை ஓவியத்தையும் பள்ளி மாணவரே வரைந்துள்ளார். இப்பள்ளியின் தமிழ்த்துறை சார்பில் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதியன்று பள்ளி வளாகத்திலுள்ள ஆற்றல் அவைக்களம் அரங்கில் இந்நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது.  'திருக்குறள் அறத்துப்பால் கதைகள்' எனும் இந்நூலை பள்ளியின் தாளாளர் சக்தி ஸ்ரீதேவி வெளியிட, கவிஞர் மு.முருகேஷ் பெற்றுக்கொண்டார். விழாவில் கல்வி இயக்குநர் கு.உதயகுமாரி, பள்ளி முதல்வர் மு.ஜெயக்குமார், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ-மாணவியர்களும் கலந்து கொண்டனர். “வகுப்பறையில் நடத்தப்படும் பள்ளிப் பாடப்புத்தகங்களை மட்டும் படித்தால் போதாது; அதையும் தாண்டி குழந்தைகளிடம் புத்தக வாசிப்புத் திறனை அதிகரிக்க...
தமிழகம்

திருப்பரங்குன்றம் நிலையூரில் அதிமுக பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ராஜன்செல்லப்பா MLA. திரைப்பட நடிகர் வையாபுரி கலந்துகொண்டனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் நிலையூரில் அதிமுக பொன்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.  நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார். மnவட்ட MGR அணி செயலாளர் ரமேஷ் வரவேற்புரை கூறினார். MLA ராஜன் செல்லப்பா,திரைப்பட நடிகர் வையாபுரி சிறப்புரையாற்றினார். அண்ணா பெயரையும் படத்தையும் வைத்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி அதிமுக. தமிழ் என்ற மொழியை வைத்து வந்ததுதான் அதிமுக 1973, திண்டுக்கல் கோவை தேர்தலில் அதிமுக வெற்றி. 3% சதவீதத்தில் வெற்றி இழந்தோம். திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 3 சதவித வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். தங்கக்கவசம் தொடர்பாதொடரப்பட்ட வழக்கில் தற்போது மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் ஒப்படைக்க தீர்ப்பு வந்துள்ளது ஆனால் பொதுக்குழு உறுப்பினர்கள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அதிக நம் பக்கம் உள்ளதால் அடுத்த முறை கண்டிப்பாக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தங்க கவசத்தை பெற்று வழங்குவார் தோல்வி நமக்குள்ள ஓபிஎஸ்க்கு தான்' ஒரு...
தமிழகம்

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கையை ஏற்று ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை. தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி நன்றி.

தாம்பரம்- செங்கோட்டை இடையே திருவாரூர் காரைக்குடி வழியாக வாரம் மூன்று முறை விரைவு ரயில் விட பொது மேலாளர் ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை! கம்பன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் திருவாரூர் காரைக்குடி பிரிவில் விரிவுபடுத்த என் கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் செய்துள்ள இந்த பரிந்துரையை வரவேற்கிறேன்! அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்! கம்பன் விரைவு ரயில் திருவாரூருக்கும் காரைக்குடிக்கும் இடையே மீண்டும் இயக்க நான் ஆகஸ்ட் 31ஆம் தேதி தெற்கு ரயில்வேபொது மேலாளருக்கு கடிதம் எழுதினேன். மக்கள் கோரிக்கையை நான் அவருக்கு தெரிவித்தேன். பொது மேலாளர் செப்டம்பர் 26 தேதியிட்ட பதில் கடிதத்தை எனக்கு அனுப்பியுள்ளார். அதில் தாம்பரத்துக்கும் செங்கோட்டைக்கு இடையே திருவாரூர் திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை காரைக்குடி வழியாக வாரம் மூன்று முறை ஒரு புதிய ரயிலை இயக்க கால அட்டவணை ரயில்வே...
தமிழகம்

உயர்நீதிமன்ற உத்தரவுபடி தேவர் தங்க கவசம் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைப்பு – பலத்த காவல்துறை பாதுகாப்புடன் பசும்பொன்னிற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்களால் கடந்த 2014ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் 13.5 கிலோ தங்க கவசம் வழங்கப்பட்டது. இந்த தங்க கவசம் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளை லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி விழாவின் போது அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்டு தங்க கவசத்தை எடுத்துசெல்வார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115ஆவது ஜெயந்திவிழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நாளை தொடங்கி வரும் 30-ந்தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் தங்க கவசத்தை பெற உரிமம் கேட்டு ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை...
தமிழகம்

விருதுநகரில் வரும் 28ம் தேதி, விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வரும் 28ம் தேதி (வெள்ளி கிழமை) விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என்று, மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 28ம் தேதி ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்ற கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து நேரிடையாக மனுக்கள் கொடுத்து தீர்வு காணலாம் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. செய்தியாளர் : வி காளமேகம்...
1 452 453 454 455 456 545
Page 454 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!