தமிழகம்

தமிழகம்

தொடர் கனமழை; திறக்கப்படும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் திறக்கப்பட உள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் கனமழையால் நிரம்பி வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புழல் ஏரியின் நீர் மட்டம் 21 புள்ளி 20 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 19 புள்ளி 30 அடியாக உள்ளது. காலை நிலவரப்படி ஏரிக்கு சுமார் ஆயிரத்து 400 கன அடி நீர் வந்துக்கொண்டிருப்பதால், காலை 11 மணியளவில் புழல் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட உள்ளது. விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்படும் என்றும், ஏரிக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து உபரி நீர் வெளியேற்றம்...
தமிழகம்

விடிய விடிய மழை.. சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

விடிய விடிய மழை பெய்து வரும் நிலையில் சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கே.கே.நகர், கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு, எழும்பூர், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், அம்பத்தூர், செங்குன்றம் உள்பட பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிக்கிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் மழை தொடர்கிறது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. சில பகுதிகளில் வீடுகளுக்கு தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்பதால் பேருந்துகள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. தியாகராய நகர் துரைசாமி சுரங்கப்பாதை உட்பட...
தமிழகம்

நிதித்துறை செயலாளர் உள்பட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: நிதித்துறை முருகானந்தம்; தொழில்துறை கிருஷ்ணன்; பொதுப்பணித்துறை கட்டாரியா; ஊரக வளர்ச்சித்துறை அமுதா நியமனம்

நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உள்பட 10 முக்கிய துறைகளின் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திமுக அரசு பதவி ஏற்ற பிறகு ஒவ்வொரு துறைகளுக்கும் நேர்மையான, திறமையான அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வந்தனர். அதிகாரிகள் நியமனம், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதேநேரத்தில் அதிமுக ஆட்சியில் நிதித்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணன் உள்ளிட்ட ஒரு சில அதிகாரிகள் மட்டும் மாற்றம் செய்யப்படாமல் இருந்தனர். இந்நிலையில் தற்போது அவர் மாற்றப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அவருக்கும் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவு: நிதித்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணன், தொழில் துறை செயலாளராக மாற்றப்பட்டார். அந்த துறையின் செயலாளராக இருந்த முருகானந்தம், நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக இருந்த அமுதா, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்...
தமிழகம்

மாமல்லபுரத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் லேசர் ஒளி, ஒலி காட்சியமைப்பு ஏற்படுத்த திட்டம்: சுற்றுலாத் துறை

மாமல்லபுரத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் லேசர் ஒளி, ஒலி காட்சியமைப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் சிற்பக்கலையை பறைசாற்றும் வகையில் கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ஜுனன் தபசு, கிருஷ்ண மண்டபம், மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உட்படபல்வேறு சிற்பங்கள் மற்றும் கலைச்சின்னங்கள் அமைந்துள்ளன. இவற்றை தொல்லியல் துறைபாதுகாத்து பராமரித்து வருகிறது. மேலும், உலக பாரம்பரிய கலைச்சின்னம் என யுனெஸ்கோ நிறுவனத்தின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்த கலைச்சின்னங்களை கண்டு ரசிப்பதற்காக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்காக சுற்றுலாத் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கரோனா தொற்று பரவலால்சுற்றுலாத் துறை முற்றிலும் முடங்கியுள்ளது. அதனால்,...
தமிழகம்

138 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னையில் தீபாவளியை முன்னிட்டு வெடிக்கப்பட்ட 138 டன் பட்டாசுக் கழிவுகளை மாநகராட்சி நேற்று அகற்றியது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சராசரியாக சுமார் 5,100 டன் திடக்கழிவுகள் சேகரமாகிறது. அவற்றை அகற்ற 358 கனரக மற்றும் இலகுரக காம்பாக்டர் மற்றும் டிப்பர் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் 3 ஆயிரத்து 725 பேட்டரி மூலம் இயங்கும் 3 சக்கர வாகனங்களும் அன்றாட தூய்மைப் பணிக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் சேகரமாகும் பட்டாசு குப்பை தூய்மைப் பணியாளர்கள் மூலமாக அந்தந்த மண்டலங்களில் தனியாக சேகரிக்கப்பட்டு வருகிறது. நேற்று பகல் 12 மணி வரை 138 டன் பட்டாசுக் கழிவுகள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் தனியாக சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தபட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட பட்டாசு...
தமிழகம்

அவசரச் சட்டம் : தனி மாநகராட்சியாக உதயமானது தாம்பரம்!!

தாம்பரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அவசர சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது . சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக மானிய கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் கே . என் . நேரு , தாம்பரம் , பல்லாவரம் , செம்பாக்கம் , பம்மல் , அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பேரூராட்சிகள் , ஊராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சி அமைக்கப்படும் என்று அறிவித்தார் . அந்த அறிவிப்பின் அடிப்படையில் , புதிய மாநகராட்சி குறித்த அரசாணை தமிழக அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்டது . அதன்படி , புதிய மாநகராட்சியில் தாம்பரத்துடன் பல்லாவரம் , பம்மல் , செம்பாக்கம் , அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் சிட்லபாக்கம் , மாடம்பாக்கம் , பெருங்களத்தூர் , பீர்க்கன்காரணை , திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளை இணைக்கவும் ,...
தமிழகம்

தமிழகம் முழுவதும் அதிகரித்த காற்று மாசு! சென்னையில் மிக மோசம்!!

தீபாவளி பண்டிகை என்பதால் நேற்று இரவு அதிக அளவில் பட்டாசுகள் வெடித்ததால் தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் காற்று மாசு மிகவும் மோசமடைந்துள்ளது. காற்று மாசுகுறித்து உலக சூழலியல் அமைப்போடு தனியார் தன்னார்வ அமைப்பு இணைந்து நடத்திய அளவீடு மூலம் இது தெரியவந்துள்ளது. இரவு 7 மணி முதல் 8 மணி வரை இரவு நேரத்தில் பட்டாசு வெடிப்பதற்கான அனுமதி கொடுக்கப்பட்டது. அப்போது மக்களால் அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால் சென்னை நகரின் காற்று மாசு அளவு மோசம் என்கிற நிலைக்கு சென்றுள்ளது. சென்னை நகரில் காற்று மாசு அளவு 100 முதல் 150 என்கிற அளவில் உள்ளது. அதிகபட்சமாக மணலியில் 344 குறியீடும், நுங்கம்பாக்கத்தில் 272 என்கிற குறியீடும் உள்ளது. பொத்தேரியில் 151, அம்பத்தூரில் 150 என்கிற அளவில் உள்ளது. வட சென்னையை விட...
தமிழகம்

இப்பொழுது தான் பாஜகவிற்கு வலிக்கத்துவங்கியிருக்கிறது..! இடைத்தேர்தலில் விழுந்த அடி அப்படி! – ஜோதிமணி எம்.பி

பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.5, டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது தான் பாஜகவிற்கு வலிக்கத்துவங்கியிருக்கிறது. நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி இன்று முதல் ரூ.5 மற்றும் ரூ.10 குறைக்கப்படும் என்று தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இந்த அறிவிப்பானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இந்த விலை குறைப்பு வாகனஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து ஜோதிமணி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.5, டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது தான் பாஜகவிற்கு வலிக்கத்துவங்கியிருக்கிறது. இடைத்தேர்தலில் விழுந்த அடி அப்படி!' என பதிவிட்டுள்ளார்....
தமிழகம்

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென் தமிழகத்தை ஒட்டி நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 7-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் தெரிவித்துள்ளார். இன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என...
தமிழகம்

கனமழை காரணமாக சென்னை, திருச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, விழுப்புரம், ராணிப்பேட்டை, நாமக்கல், வேலூர், திருவாரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஓரிரு மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடிய விடிய தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவை பிறப்பித்துள்ளன. வடகிழக்கு பருவமழையின் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர்,...
1 452 453 454 455 456 498
Page 454 of 498

Right Click & View Source is disabled.

error: Content is protected !!