தமிழகம்

தமிழகம்

நவ. 25ம் தேதி முதல் 9 எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: ரயில்வே வாரியம் கீவரும் 25ம் தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்க அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி மதுரை-புனலூர் இடையே இயக்கப்படும் ரயில் எண் (16729), புனலூர்-மதுரை இடையே இயக்கப்படும் ரயில் எண் (16730) எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 முன்பதிவில்லா பெட்டிகளும், மங்களூரு-கோவை இடையே இயக்கப்படும் ரயில் எண் (22609), கோவை-மங்களூரு இடையே இயக்கப்படும் ரயில் எண் (22610) இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 6 முன்பதிவில்லா பெட்டிகளும், மங்களூரு-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில் எண் (16605), நாகர்கோவில்-மங்களூரு இடையே இயக்கப்படும் ரயில் எண் (16606) எக்ஸ்பிரஸ் ரயிலில் 6 முன்பதிவில்லா பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர்-காரைக்குடி இடையே இயக்கப்படும் ரயில் எண் (12605), காரைக்குடி-எழும்பூர் இடையே இயக்கப்படும் ரயில் எண் (12606) பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 முன்பதிவில்லா பெட்டிகளும், எழும்பூர்-மதுரை...
தமிழகம்

தமிழக வெள்ள பாதிப்புகளை பார்வையிட, மத்திய குழு இன்று வருகை

தமிழகத்தில் மழை பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது. வடகிழக்கு பருவ மழைக் காரணமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழைச் சேதங்களை கண்டறிவதற்காக மத்திய குழு விரைவில் தமிழகம் வர உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சேத விவரங்களை அளித்த திமுக எம்.பி. டி. ஆர். பாலு தெரிவித்திருந்திருந்தார். மேலும் வெள்ள நிவாரண நிதியாக தமிழகத்துக்கு 2,629 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் மழை பாதிப்பு தொடர்பாக தமிழக அமைச்சரவை கூட்டம் சனிக்கிழமை நடந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மத்திய குழு தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட, 7 அதிகாரிகள் கொண்ட மத்திய குழுவினர் 21-ம்தேதி (இன்று) பிற்பகல் வருகின்றனர்., நவ....
தமிழகம்

சசிகலா வீட்டுக்கு படையெடுக்கும் அதிமுகவினர்: எடப்பாடி அதிர்ச்சி !

சிறையில் இருந்து வெளியே வந்ததும் சிறிது காலத்துக்கு பிறகு அரசியலில் இறங்கியுள்ளார் சசிகலா. அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா மிகத் தீவிரமாக இயங்கி வருகிறார். தொண்டர்களின் ஆதரவு தனக்கு தான் இருப்பதாக கூறிவரும் சசிகலா தன்னை அதிமுக பொதுச் செயலாளர் என்றே குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டு வருகிறார். அடுத்தடுத்த தேர்தல் தோல்வி, முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் என அதிமுக அல்லோகலப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், கட்சியை வலுப்படுத்தும் வகையில் சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் அதிமுக மேல்மட்ட நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என்று ஓபிஎஸ் பேசியது இதன் பின்னணி தான் எனவும் கூறப்படுகிறது. செல்லூர் ராஜு, ஜேசிடி பிரபாகர், முன்னாள் எம்.பி....
தமிழகம்

ஜனவரி 20-ஆம் தேதி முதல், டி செமஸ்டர் தேர்வு; உநேரயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி

அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும், ஜனவரி 20-ஆம் தேதி முதல், நேரடி செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துறையின் செயலாளர் கார்த்திகேயன், தேர்வு துறையை சேர்ந்த அதிகாரிகள் ஆகியோர் 11 மாணவர்கள் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகளுடன் நடப்பு செமஸ்டர் தேர்வை நேரில் எதிர்கொள்வது குறித்து கருத்துக்களை கேட்டறிந்தனர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி, மாணவர்கள் ஆன்லைன் தேர்வு முறை வேண்டாம் எனக் கூறியதாகத் தெரிவித்தார். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று 2 மாதம் கால அவகாசம் வழங்கப்படுகிறது என்றும் ஜனவரி 20-ஆம் தேதிக்கு பிறகு நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் எனவும் கூறினார். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்....
தமிழகம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை; 2 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின: 200 ஏக்கர் வாழைத் தோப்பிலும் நீர் தேங்கியது

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 2 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. 200 ஏக்கர் வாழைத் தோப்பில் மழைநீர் தேங்கியுள்ளது. தஞ்சாவூர் உட்பட டெல்டா மாவட்டங்களில் ஏற்கெனவே பெய்த தொடர் கனமழையால் 1.50 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. கடந்த 4 நாட்களாக மழை குறைந்ததால், வயலில் தேங்கிய தண்ணீர் வடியத் தொடங்கியது. வடிகால் முறையாக தூர் வாரப்படாததால், பல இடங்களில் தண்ணீர் வடிவதில் தாமதமாகி, பயிர்கள் அழுகத் தொடங்கின. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் கனமழை பெய்ததால் அம்மையகரம், செய்யாமங்கலம், பாதிரக்குடி, கழுமங்கலம், களர்பட்டி, அம்மன்குடி, அந்தலி, நடுக்காவேரி, அம்மன்பேட்டை, ஆற்காடு, கண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கரில் புதிதாக நடவு...
தமிழகம்

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை – புதுச்சேரி இடையே முழுமையாக கரையை கடந்தது

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுமையாக கரையை கடந்தது. புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. அதிகாலை 1.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கி 3 மணிக்கும் 4 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கரையை கடந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், ஈரோட்டில் கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரியில் 19 செ.மீ, கடலூரில் 14 செ.மீ மழை பெய்துள்ளது. வட தமிழகத்தின் மேல் நிலை கொண்டுள்ள தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்க கூடும் தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  ...
தமிழகம்

பொதுமக்கள் அவசர கட்டுப்பாட்டு எண்ணிற்கு அழைக்கலாம் – சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயார் நிலையில் இருப்பதாக ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று பிற்பகல் முதல் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோயம்பேடு, அண்ணா நகர், வடபழனி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கனமழை எதிர்கொள்ளும் வகையில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் இறைக்கும் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் படகுகளும் தயார்...
தமிழகம்

இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (நவ.18) அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை வாய்ப்பு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது: தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது, தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து நிலைகொள்ளக்கூடும். அரபிக் கடலில் கோவா அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இரு புறங்களிலும் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் நிலவுவதால், தமிழகத்துக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்...
தமிழகம்

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் மகா தேரோட்டம்: அரோகரா முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம்

அண்ணாமலையார் கோயிலில்கார்த்திகை தீபத் திருவிழாவைஒட்டி மகா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 7-ம் தேதிவிழா தொடங்கி 10-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகா தேரோட்டம், 7-ம் நாள் உற்சவத்தன்று நடைபெறும். இதில் பராசக்தி அம்மன் திருத்தேரை, பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுப்பர். இத்தகைய பிரசித்திப் பெற்ற மகா தேரோட்டம், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மாட வீதியில் நடைபெறவில்லை. அதற்கு மாற்றாக கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது. விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் (பஞ்ச மூர்த்திகள்) 5 திருத்தேர்களில் தனித்தனியே எழுந்தருளிபக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் மகா...
தமிழகம்

தமிழக பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை: அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கிவைத்தார்

சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் சேவையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனை சார்பில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை இயக்குநர் ஜெ.குமரகுருபரன், மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அஸ்வின், துணைத் தலைவர் மருத்துவர் ராஜு பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: சிம்ஸ் - எஸ்ஆர்எம் மருத்துவ நிறுவனம் சார்பில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் வாகனம் தொடங்கி வைக்கப்படுகிறது. சபரிமலை அடிவாரத்துக்கு செல்லும் இந்த ஆம்புலன்ஸ் வாகனம், 2 மாத காலத்துக்கு அங்கேயே இருந்து தமிழக பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அவசர உதவிக்கும் பயன்படும். ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒரு...
1 449 450 451 452 453 498
Page 451 of 498

Right Click & View Source is disabled.

error: Content is protected !!