தமிழகம்

தமிழகம்

காணிக்கை நகைகளை உருக்க விதித்த தடை உத்தரவு மேலும் ஆறு வாரங்களுக்கு நீட்டிப்பு

  கோவில்களுக்கு காணிக்கையாக வந்த நகைகளை உருக்குவது தொடர்பாக முடிவெடுக்கக் கூடாது என்ற உத்தரவை, மேலும் ஆறு வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.சென்னையைச் சேர்ந்த, 'இண்டிக் கலெக்டிவ்' அறக்கட்டளை தலைவர் டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனு:கோவில்களில் உள்ள நகைகளை உருக்குவது தொடர்பாக, அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவில் நிர்வாகம் தொடர்பாக, அறங்காவலர்கள் குழு தான் முடிவெடுக்க வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளாக கோவில்களுக்கு வந்த நகைகளை உருக்கி, கட்டிகளாக மாற்றி, வங்கிகளில் டிபாசிட் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.நகைகளை பாதுகாக்கும்படி, அறங்காவலர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தலாம். நகைகளை உருக்கும்படி உத்தரவிட முடியாது.தமிழகத்தில், ஏராளமான கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. அறநிலையத் துறை ஊழியர்கள், தக்காராக பணியாற்றுகின்றனர். அவர்களால் கொள்கை முடிவு எடுக்க முடியாது. எனவே, அறநிலையத் துறை கமிஷனரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும். நகைகளை உருக்குவதற்கு...
தமிழகம்

ரூ.14.50 கோடி செலவில் உருவாக்கப்பட்ட கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்: முதல்வர் ஸ்டாலின் இன்று திறப்பு

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் கீழ் பகுதியில் ரூ.14.50 கோடியில் வணிக வளாகம், சிறுவர் பூங்கா, உணவு மையம் உட்பட பல்வேறு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள நகர்ப்புற சதுக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். சென்னை கிண்டி, கத்திப்பாரா மேம்பாலம் கீழ் பகுதியில் ரூ.14.50 கோடியில் 'கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்' அமைக்கும் பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மொத்தமுள்ள 5.38 லட்சம் சதுரஅடி பரப்பளவில் வணிக வளாகம், சிறுவர் பூங்கா, உணவு மையம், பேருந்து நிறுத்தம், நடைபாதைகள் உள்ளிட்ட வசதிகள் இந்த பணிகள் நடைபெற்று வந்தன. கரோனா பாதிப்பு காரணமாக இந்த பணிகள் முடங்கின. அதன்பிறகு இந்த பணிகள் தொடங்கி நடைபெற்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் 8-ம் தேதியன்று இந்த இடங்களை நேரில் வந்து ஆய்வு செய்தார். மேலும், பணிகளை விரைந்து முடிக்க...
தமிழகம்

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை !

அதிமுகவை சேர்ந்த முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுகவின் முன்னாள் மின்துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், சோதனை நடைபெறும் இடங்களின் எண்ணிக்கை கூடலாம் என கூறப்படுகிறது. முன்னதாக, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது எழுந்த ஊழல் புகாரின் அடிப்படையில் ஒவ்வொருவர் வீடாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். அவ்வகையில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனைகளில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த வரிசையில் தற்போது அதிமுக முன்னாள் மின்துறை அமைச்சர்...
தமிழகம்

இனி எங்கும் அலைய தேவை இல்லை.! விவசாயிகள் வாட்ஸ் அப் மூலமே புகார் அளிக்கலாம்.! தமிழக அரசு புதிய முயற்சி

தமிழகத்தில் உரம் தொடர்பான தகவல்களைப் பெறவும், புகார்களைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள விவசாயிகள் தங்கள் புகார்களை வாட்ஸ் அப் செயலி மூலமாகவும் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாட்டில் நெற்பயிர் 18.5 லட்சம் ஹெக்டேர் பரப்பிலும், சிறுதானியம், பயறுவகைகள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு, பருத்திப் பயிர்கள் சேர்த்து 46.2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டுவருகிறது. இதற்குத் தேவையான உரங்கள் மாநிலத்தில் உள்ள எட்டாயிரத்து 100 தனியார் விற்பனை நிலையங்கள், நான்காயிரத்து 354 கூட்டுறவு விற்பனை மையங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மாதந்தோறும் மாநில அரசுக்குத் தேவையான மானிய உரங்களான யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரங்கள் மத்திய அரசால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடுசெய்யப்படுகிறது. ஒதுக்கீடுசெய்யப்பட்ட உரங்கள் சுமார் 15 உர நிறுவனங்கள் வாயிலாக...
தமிழகம்

ஆங்கிலப் புத்தாண்டு தினம்: கடற்கரைகளில் பொது மக்கள் கூட அனுமதியில்லை

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை ஒட்டி, கடற்கரைகளில் பொது மக்கள் கூடுவதற்கு அனுமதியில்லை. கரோனா நோய்த் தொற்று தடுப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை வெளியிட்டாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: பண்டிகைக் காலங்களில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின்படி, கரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடற்கரைகளில் கூடத் தடை: பண்டிகைக் காலங்களில் பொது மக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. சமுதாய, கலாசார,...
தமிழகம்

நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 800 அரங்குகளுடன் ஜன.6-ல் 45-வது சென்னை புத்தகக் காட்சி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து விருதுகளை வழங்குகிறார்

நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 800-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்படும் 45-வது புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் ஜன.6-ம் தேதி தொடங்கி வைத்து, முத்தமிழ் அறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி விருதுகளையும் வழங்குவார் என்று பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) புதிய தலைவர் எஸ்.வயிரவன், புதிய செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பபாசி சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 45-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன.6 முதல் 23-ம் தேதி வரை 18 நாட்கள் நடைபெறுகிறது. புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, 2022-ம் ஆண்டுக்கான முத்தமிழ் அறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி விருதுகளையும் வழங்குகிறார். விழாவில், சிறந்த...
தமிழகம்

சென்னையில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள்

சென்னையில் 335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய மேம்பாலங்களை கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் வாகன போக்குவரத்து நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை குறைப்பதற்கு மாநகராட்சி சார்பாகவும், பொதுப்பணித்துறை சார்பாகவும் பல்வேறு இடங்களில் புதிய மேம்பாலங்களை அமைத்து வருகின்றன. சமீபத்தில் கட்டிமுடித்த வேளச்சேரி மேம்பாலம், கோயம்பேடு மேம்பாலம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மாநகராட்சி ஏற்கனவே கணேசபுரத்தில், ஓட்டேரியில் மற்றும் தி. நகர் உஸ்மான் சாலையில் என 3 புதிய மேம்பாலங்களை கட்ட மாநகராட்சி திட்டமிட்டு இருந்தது. இதற்காக 335 கோடி ரூபாயை உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி மூலம் பெற்று இந்த புதிய மேம்பாலகளை கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கணேசபுரத்தில் 142 கோடி ரூபாயில் 680 மீ நீளமும் மற்றும் 15.20 மீ அகத்திற்கு 4 வழி சாலையாக கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதே போல்...
தமிழகம்

அதிமுக உட்கட்சி தேர்தல்;இன்று தொடக்கம்!

அதிமுக கிளைக் கழக நிர்வாகிகள்,பேரூராட்சி வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான உட்கட்சி தேர்தல்கள் முதற்கட்டமாக இன்றும்,நாளையும் நடைபெறுகின்றன. அதிமுகவின் செயற்குழு கூட்டம் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதியன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும்,8 ஆம் தேதியன்று அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி,அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து,அதிமுக கிளை நிர்வாகிகள்,பேரூராட்சி வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான உட்கட்சி தேர்தல் இன்று (13.12.2021) முதல் 23.12.2021 வரை நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்...
தமிழகம்

கெமிக்கல் நிறுவனத்தில் வாயு கசிவு.. ஒருவர் பலி, 13 பேர் மருத்துவமனையில் அனுமதி – அமைச்சர் நேரில் ஆய்வு

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் தாமோதரன் என்பவர் ஸ்ரீதர் கெமிக்கல் என்ற குடோன் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் 900 கிலோ குளோரின் கேஸ் மிகப்பெரிய கலனில் சேமிக்கப்பட்ட பின்னர் தொழிற்சாலைக்கு தேவையான அளவில் சிறிய கலன்களுக்கு மாற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று, வழக்கம் போல் பெரிய கலனிலிருந்து சிறிய கலனுக்கு கேஸ் மாற்றும் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தால் குளோரின் கேஸ் கசியத் தொடங்கியது. கேஸ் மேலும் பரவத் தொடங்கியதையடுத்து அருகில் இருந்த தொழிற்சாலைகளில் பணிபுரிந்தவர்கள் மயக்கமடைத்தனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக்குழுவினர் மயக்கமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஈரோடு, சித்தோடு, பவானி போன்ற பகுதிகளிலிருந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் பாதுகாப்பு கவச உடை அணிந்து தொழிற்சாலைக்குள் சென்று கேஸின் வ வீரியத்தை குறைத்தனர். இந்த...
தமிழகம்

அடுத்த மூன்று மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது . இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.  ...
1 444 445 446 447 448 498
Page 446 of 498

Right Click & View Source is disabled.

error: Content is protected !!