தமிழகம்

தமிழகம்

ஒமைக்ரான் பரவல், மருத்துவ கட்டமைப்பு குறித்து சென்னையில் மத்திய குழு 2-வது நாளாக ஆய்வு

ஒமைக்ரான் தொற்று பரவல் மற்றும் மருத்துவ கட்டமைப்பு குறித்து சென்னையில் 2-வது நாளாக மத்திய குழுவினர் ஆய்வு நடத்தினர். தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கரோனா வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. தமிழகத்தில் 45 பேர் உட்படநாடு முழுவதும் 650-க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஒமைக்ரான் பரவல் அதிகம் உள்ள தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், மிசோரம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய குழுவினர் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக, மருத்துவர்கள் வினிதா, பர்பசா, எஸ்.சந்தோஷ்குமார், தினேஷ்பாபு ஆகியோர் கொண்ட மத்திய குழுவினர் கடந்த 26-ம் தேதி இரவு சென்னை வந்தனர். சென்னை...
தமிழகம்

இரவு நேர ஊரடங்கால் ஒரு பயனும் இல்லை – சொல்கிறார் பிரபல மருத்துவ நிபுணர்!!

ஒமைக்ரான் பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கை மாநில அரசுகள் பிறப்பித்து வரும் நிலையில், அதனால் எந்த பயனும் இல்லை என தேசிய தொற்று நோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குநர் டாக்டர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார் . இந்தியாவில் கொரோனாவின் ஒமைக்ரான் வகை தொற்று பரவி வருவதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது . மேலும் ஒன்றிய அரசு சார்பில் மாநில அரசுகளே தொற்று பரவலின் அடிப்படையில் உள்ளூரில் கட்டுப்பாடுகளை அறிவித்துக்கொள்ளலாம் என சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் , தேசிய தொற்று நோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குநர் டாக்டர் பிரதீப் கவுர் இரவு நேர ஊரடங்கு எந்த பலனையும் அளிக்காது எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் . கொரோனா வைரஸின் ஒமைக்ரான் பரவலுக்கு எதிராக இரவு...
தமிழகம்

தமிழகத்தில் ‘ஒமைக்ரான்’ ஊரடங்கு: 31ல் அறிவிப்பு

''ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து, வரும் 31ம் தேதி மருத்துவ குழுவினரிடம் ஆலோசித்து முதல்வர் அறிவிப்பார்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்தா அரசு மருத்துவமனையில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில், 'டேட்டா செல்' என்ற தரகு அலகு அமைக்கப்பட்டு உள்ளது.அதை துவக்கி வைத்த பின், அமைச்சர் அளித்த பேட்டி: கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் போது, ஓமியோபதி, சித்தா, யுனானி போன்ற மருத்துவத்தால் மக்கள் பயன் பெற்றனர். அதேபோல, 'ஒமைக்ரான்' பரவி வரும் நிலையில், அதற்கும் சித்த மருத்துவத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் தமிழகத்தில், 77 இடங்களில் இந்திய மருத்துவம் சார்பில், கொரோனா கண்காணிப்பு மையம் துவக்கப்பட்டது. இந்திய மருத்துவத்திற்காக நிரந்தரமாக, 1,700 படுக்கைகள் உருவாக்கப்பட்டன. 6,700...
தமிழகம்

மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதை முதல்வர் ரத்து செய்ய வேண்டும்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

மின் கட்டணங்களுக்கான ஜிஎஸ்டி வசூலிப்பை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறித்து பல்வேறு விமர்சனங்களை தெரிவித்துவிட்டு, முதல்வரான பிறகு அதிமுக ஆட்சியில் ஜிஎஸ்டி வசூலிக்காதவற்றுக்கு எல்லாம் வரி வசூலிக்க உத்தரவிட்டு வருவதுதிமுகவின் இரட்டை நிலைப்பாட்டுக்கு உதாரணமாக உள்ளது. மின் பயன்பாடு கட்டணம் தவிர பிற மின் கட்டணங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்திமற்றும் பகிர்மானக் கழகத்தில் பதிவுக் கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் கட்டணம், வளர்ச்சிக் கட்டணம், ஆரம்ப மின் பயன்பாடு கட்டணம், மின்துண்டிப்பு கட்டணம் என பல வகையான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. எந்த கட்டணத்துக்கும் இதுவரை...
தமிழகம்

பாடகர், நடிகர் மாணிக்க விநாயகம் காலமானார்

பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் நேற்று சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் காலமானார். அவருக்கு வயது 78. மயிலாடுதுறை மாவட்டம் வழுவூரை சேர்ந்த பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் இராமையாவின் இளைய மகன் மாணிக்கவிநாயகம். இவர், பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தி பாடல்கள், நாட்டுபுறப்பாடல்களையும் பாடியுள்ளார். திருடா திருடி, கம்பீரம், பேரழகன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். அவரின் இறுதி அஞ்சலி இன்று சென்னையில் நடைபெறவுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை: பிரபல திரைப்படப் பாடகரும் நடிகருமான வழுவூர் மாணிக்க விநாயகம் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது...
தமிழகம்

கிறிஸ்துமஸ் விழா கோலாகல கொண்டாட்டம் : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கொரோனா பரவல் அச்சத்திற்கிடையே கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர். உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஏசு கிறிஸ்துவின் பிறப்பு வித்தியாசமானது. ஏசு பிறந்த போது 'ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று' என்கிறது விவிலியம். அதாவது ஆளும் அதிகார வர்க்கத்தின் அஸ்திவாரம் அவரது வருகையால் கலங்கிப்போனது. பிறக்கும்போதே சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய குழந்தை ஏசு பிரான். தேவன் எங்கும் இருப்பவர், ஒரே நேரத்தில். தேவன் எல்லாம் அறிந்தவர். தேவன் எல்லாம் வல்லவர் என்கிறது தேவனுடைய வேத ஆகமம். மண்ணில் பிறந்த மக்களை ரட்சிக்க ஏசு மகான் பிறந்த நாள் குளிர்...
தமிழகம்

பிரசாதங்களை தயாரிக்க ஆவின் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் -அறநிலையத்துறை

திருக்கோவில்களில் பிரசாதங்களை தயாரிக்க ஆவின் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் ஜெ.குமரகுருபன் பிறப்பித்துள்ள உத்தரவில், "தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் ஆவின் நிறுவனத்தின் வெண்ணை மற்றும் நெய் பொருட்களை கொண்டு மட்டுமே தயாரிக்க வேண்டும். பிரசாதங்களின் தரத்தினை மேம்படுத்தவும், பிரகாரங்களில் தரமற்ற நெய்யை பயன்படுத்தி விளக்கு/தீபம் ஏற்றுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினை தவிர்க்கும் பொருட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருக்கோவில்களில் விளக்கேற்றவும், நெய்வேத்திய பிரசாதம் தயார் செய்யவும் பயன்படுத்தப்படும் வெண்ணை, நெய் போன்ற பொருட்களை ஆவின் நிறுவனம் மூலம் மட்டுமே கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும். இதற்காக ஆவின் நிறுவனத்தில் 15 மி.லி பேக்கிலிருந்து 20கி.கி வரையிலான பேக்குகள் விற்பனைக்கு தயாராக உள்ளன." என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது ஜனவரி...
தமிழகம்

நீலகிரியில் தொடங்கிய உறைபனி சீசன் – ஊட்டியில் கடும் பனிப்பொழிவு

நீலகிரி மாவட்டத்தில் உறை பனி சீசன் தொடங்கியது, இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் வரை உள்ளதால் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உட்பட பல பகுதிகளில் பனி பொழிவால் பொது மக்களின் இயல்பு வாழக்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பனியின் தாக்கம் அதிகம் காணப்படும். கடந்த மார்ச் மாதம் முதல் தொடர் மழை காரணமாக இந்த முறை பனிப்பொழிவு தாமதமாக துவங்கியுள்ளது. குறிப்பாக கடந்த வாரம் முழுவதும் பனியின் தாக்கம் காணப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக உதகை நகரில் மத்திய பேருந்து நிலையம், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், காந்தல், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகள், புல்வெளிகளில் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. உதகையில் இன்று காலை...
தமிழகம்

திமுகவினரின் அட்டூழியத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட ஐயா எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி – சீமான்

'தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் திமுக குண்டர்களின் அட்டூழியத்தைக் கண்டித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழினிசாமிக்கு நன்றி' தெரிவிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். முன்னதாக, எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் தற்போது ஒரு நூதனமான ஆட்சி தீய சக்திகளால் நடத்தப்பட்டு வருகிறது என்பதற்கு பல்வேறு சம்பவங்களை எனது அறிக்கைகளின் வாயிலாக அவ்வப்போது சுட்டிக் காட்டி வருகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு (21.12.2021), தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அப்பகுதியில் உள்ள ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், பேச்சாளரை மேடையிலேயே கடுமையாகத் தாக்கியுள்ளனர். ஜனநாயக முறையில் நடைபெற்ற அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டத்தில், இவ்வாறு திமுக-வினர் அராஜகத்தில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். தாக்குதல் நடத்திய ஆளும் கட்சியினரைத் தடுக்காமல், அங்கிருந்த காவல்துறை கைகளைக் கட்டியபடி வேடிக்கை...
தமிழகம்

வல்லுநர் குழு பரிந்துரையின்பேரில் தமிழகம் முழுவதும் 551 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி: இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு

வல்லுநர் குழுவின் பரிந்துரையின்பேரில் தமிழகம் முழுவதும் 551 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ஆகமவிதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்கு நடத்த வேண்டும். பழமை வாய்ந்த கோயில்களில், அவற்றின் பழமை மாறாது சீரமைத்தல், புதுப்பித்தல், பாதுகாத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை வல்லுநர்கள் கருத்துரு பெற்று, மண்டலஅளவிலான வல்லுநர் குழு மற்றும்மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப் பட்டு வருகிறது. கோயில் திருப்பணி மேற்கொள்ள இரு வல்லுநர் குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட, சென்னை வடபழநி ஆண்டவர் கோயில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், ராணிப்பேட்டை காளகஸ்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 551 கோயில்களுக்கு...
1 442 443 444 445 446 499
Page 444 of 499

Right Click & View Source is disabled.

error: Content is protected !!