தமிழகம்

தமிழகம்

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி புறக்கணிப்பு ஜன.26-ல் தி.க. ஆர்ப்பாட்டம்

குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து வரும் 26-ம் தேதி அனைத்துக் கட்சி அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜன.26-ம் தேதி புதுடில்லியில் நடைபெறவிருக்கும் குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் தமிழகம் கேரளா, மேற்கு வங்க மாநிலங்களுக்கு இடம் அளிக்காமல் புறக்கணித்துள்ள மத்திய அரசின் நிலைப்பாடு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குடியரசு நாள் அணிவகுப்பில் அலங்கார ஊர்தியில், சம்பந்தப்பட்ட மாநிலங்கள், எந்த வகையான அம்சங்களும், அடையாளங்களும், தகவல்களும் இடம்பெற வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை பெற்றவையே. அந்த அடிப்படையில் தமிழகத்துக்கான அலங்கார அணிவகுப்பில், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், வ.உ.சி., பாரதியார் உருவங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் இந்த அலங்கார ஊர்தியை மத்திய அரசு நியமித்த 10...
தமிழகம்

பா.ஜ., – அ.தி.மு.க., கூட்டணி தொடரும்: பொன் ராதாகிருஷ்ணன்

''உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜ.,- அ.தி.மு.க., கூட்டணி தொடரும் ,'' என , முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.சிவகாசியில் அவர் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பா.ஜ., சார்பில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடக்கிறது. உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க., கூட்டணி தொடரும். சிவகாசி மேயர் பதவியை பா.ஜ.,விற்கு வழங்க வலியுறுத்துவோம். பட்டாசு தொழிற்சாலையில் ஏற்படும் விபத்துக்கள், இறப்புகளால் பாதிக்கப்படுவது தொழிலாளர்கள் மட்டுமல்ல முதலாளிகளும் தான். எனவே பாதுகாப்புக்கான திட்டங்கள் தீட்டப்படும். பட்டாசு இல்லாத தீபாவளியை நினைத்து பார்க்க கூட முடியாது.கொரோனா தடுப்புவிதிகளின்படி தேர்தல் நடத்த வேண்டும். பிரதமர் மோடியின் முயற்சியால் 150 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கேட்டதற்கும் அதிகமான தடுப்பூசிகளை பிரதமர் வழங்கி உள்ளார். இதை முறையாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.பொய்யான வாக்குறுதி:தேர்தலுக்காக தி.மு.க., வின் முதல் மூலதனமே...
தமிழகம்

50 ஆண்டுக்கு பின் சென்னை மாநகராட்சிக்கு பெண் மேயர்! பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு

புகழ்பெற்ற சென்னை மாநகராட்சிக்கு 50 ஆண்டுகளுக்கு பின், பெண் ஒருவர், அதுவும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் மேயராவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்து, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால், விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்திலேயே மிகப்பெரிய மாநகராட்சியான சென்னை பெருநகர மாநகராட்சி, 15 மண்டலங்கள் உள்ளடக்கிய, 200 வார்டுகளை கொண்டு உள்ளது. மேயர் பதவிக்கு, இதுவரை மூன்று முறை நேரடி தேர்தல் நடந்தது. தற்போது நடக்க உள்ள தேர்தலில், மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கு, மறைமுக தேர்தல் நடக்க உள்ளது.பணிகள் மும்முரம்தேர்தல் நடத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. தன்படி, வார்டு வரையறை, வார்டு இட ஒதுக்கீடு, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, ஓட்டுச்சாவடி ஒதுக்கீடு, ஓட்டுச்சாவடிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரம்...
தமிழகம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கருப்பாயூரணி கார்த்திக்-க்கு கார் பரிசு

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கி கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் முதலிடம் பிடித்தார். முதலிடம் பிடித்த அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையன்று மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு அடுத்த நாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்தநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு பொங்கலையொட்டி கடந்த 14-ம் தேதி அவனியாபுரத்திலும், 15-ம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று முன்தினம் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு நேற்று முன்தினம் அமலில் இருந்ததால் ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டு, நேற்று (திங்கட்கிழமை) அங்கு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.  விறுவிறுப்புடன் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில்  8 சுற்றுகளில் 1020 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 21 காளைகளை பிடித்த கருபாயூரணி கார்த்திக் முதலிடம்...
தமிழகம்

தீவிரமடையும் கொரோனா பரவல்: 10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை!

கொரோனா தொற்று காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுத் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதற்கிடையே, இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்தலாம் என ஐகோர்ட் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்நிலையில், அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. மேலும், ஜனவரி 19-ம் தேதி தொடங்கவிருந்த 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது....
தமிழகம்

5 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

5 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது....
தமிழகம்

70 பேருக்கு கொரோனா. இன்று முதல் வண்டலூர் பூங்கா மூடல்!!

கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இது தொடர்பாக வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , " கொரோனா தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக , அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா , வண்டலூர் 17.01.2022 முதல் 31.01.2022 வரை பொதுமக்களுக்கு மூடப்படுகிறது . 31.01.2022 அன்று நிலைமையை மதிப்பாய்வு செய்து , அதற்கேற்ப முடிவு எடுத்து பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஏனென்றால் அங்கு வேலை செய்யும் 70 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனால் அவர்களின் மூலம் விலங்களுக்கு கொரோனா பரவல் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தகைய முடிவை பூங்கா நிர்வாகம் எடுத்துள்ளது. கடந்த ஆண்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரண்டு சிங்கங்களுக்கு...
தமிழகம்

ஒரே நாளில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறந்துவைப்பு

தமி­ழ­கத்­தில் புதி­தாக கட்­டப்­பட்­டுள்ள 11 மருத்­து­வக் கல்­லூ­ரி­களை பிர­த­மர் மோடி நேற்று திறந்து வைத்­தார். திறப்பு விழா­வுக்கு வர இய­லாத கார­ணத்­தால் காணொளி வசதி மூலம் அவர் திறப்பு விழா­வில் பங்­கேற்­றார். மருத்­து­வக் கல்­லூரி இல்­லாத 11 மாவட்­டங்­களில் இந்த கல்­லூ­ரி­கள் கட்­டுப்­பட்­டுள்­ளன. இந்­நி­கழ்­வில் பேசிய பிர­த­மர் மோடி, ஒரு மாநி­லத்­தில் ஒரே நேரத்­தில் 11 மருத்­து­வக் கல்­லூ­ரி­கள் திறக்­கப்­ப­டு­வது இதுவே முதல்­முறை என்­றார். முன்­ன­தாக, உத்­த­ரப் பிர­தே­சத்­தில் ஒரே நாளில் ஒன்­பது மருத்­து­வக் கல்­லூ­ரி­கள் திறக்­கப்­பட்­டதே சாத­னை­யாக இருந்­தது என்­றும் அவர் குறிப்­பிட்­டார். இந்­தி­யா­வில் 387ஆக இருந்த மருத்­து­வக் கல்­லூ­ரி­க­ளின் எண்­ணிக்கை, பாஜக ஆட்­சிக்கு வந்­த­பின் 596ஆக அதி­க­ரித்­துள்­ளது என்­றும் முந்­தைய மத்­திய அரசு மருத்­து­வம் சார்ந்த படிப்­பு­களை ஊக்­கப்­ப­டுத்த எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை என்­றும் பிர­த­மர் மோடி தெரி­வித்­தார். இந்நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,...
தமிழகம்

வைகுண்ட ஏகாதசி விழா – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு;

தமிழகத்தில் உள்ள வைணவ தலங்களில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக சொர்க்கவாசல் திறப்பின்போது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தமிழகத்திலுள்ள வைணவ திருத்தலங்களில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதேசி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக வைகுண்ட ஏகாதசி விழா, கடந்தாண்டு ரத்து செய்யப்பட்டது.வைகுண்ட ஏகாதசியையொட்டி தமிழகத்திலுள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் சொர்க்கவாசல் வழியாக ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்கள் உடன் பெருமாள் அருள்பாலித்தார். இந்த ஆண்டு விழா நடக்கும் என, பக்தர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஒமிக்ரான் பரவல் காரணமாக இந்த ஆண்டும் பக்தர்களுக்கு சொர்க்க வாசல் திறப்பின் போது தடை விதிக்கப்பட்டது. திருப்பதியில்...வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கோவிட் கட்டுப்பாடு காரணமாக, முக்கிய...
தமிழகம்

நீட் தேர்வு விலக்கு, 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி: மத்திய அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு, 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை, மத்திய அமைச்சரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு மற்றும் மருத்துவமனைகள் ஆய்வுக்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியா சென் னைக்கு வந்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சரிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதை கருத்தில்கொண்டு மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு விலக்க அளிக்கப்பட்டால், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே எம்பிபிஎஸ், பல் மருத்துவம், ஆயுஷ்...
1 438 439 440 441 442 499
Page 440 of 499

Right Click & View Source is disabled.

error: Content is protected !!