வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொதுக்குழு கூட்டம்
கோரிப்பாளையம் ஜம்புராபுரம் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பிலால் தீன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் ஜாபர் சுல்தான் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் ரபீக் அஹமது, கலந்து கொண்டு வடக்கு மாவட்ட செயல்பாடுகள் குறித்து பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். 2021-2022 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை பொது செயலாளர் ஜியாவுதீன் அமைப்பு பொதுச்செயலாளர் பகுருதீன் ஆகியோர் சிறப்பாக சமர்ப்பித்தனர். மாவட்ட பொருளாளர் ரகுமான், செயற்குழு உறுப்பினர்கள் சீனி சிக்கந்தர், முகமது தாஹா, ஆகியோர் தீர்மானங்கள் வாசித்தனர். 1- மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி இல்லை மருத்துவமனை அமைந்துள்ள எதிர் சாலை பகுதியில் பார்க்கிங்காக மாறியுள்ளது இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது முக்கியமான நேரங்களில் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது ஆகவே போதிய பார்க்கிங் வசதி...
