தொண்டி அருகே ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் – போலீசார் தீவிர விசாரணை
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பாசிபட்டினம் தெற்கு கடற்கரை பகுதியில் காவல் ஆய்வாளர்கள் கனகராஜ், மாரியப்பன் ஆகியோர் தலைமையில் மரைன் மற்றும் கியூ பிரிவு போலீசார் இன்று மாலை திடீர் சோதனை நடத்தினர். அங்குள்ள ஆற்றுவாய் மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகளை கைப்பற்றினர். விசாரணையில் அங்குள்ள கடலில் சட்ட விரோத மீன் பிடியில் ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்த பதுக்கி வைத்திருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக தொண்டியை சேர்ந்த 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் தொண்டி, பாசிபட்டினம் கடற்பகுதிகளில் பரபரப்பு நிலவியது. செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்...









