தமிழகம்

தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக கிராம கமிட்டி உறுப்பினர்கள் அவனியாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகை

மதுரை தெற்கு தாசில்தார் முத்துப்பாண்டி முன்னிலையில் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் சந்திரன் கிராம கமிட்டி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாதால் தொடர்ந் து கிராம நிர்வாக அலுவலக வாயிலில் கிராம கமிட்டியினர் அமர்ந்துள்ளனர். தைப்பொங்கல் அன்று நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் அமைதி கூட்டம் நாளை (30.12.227 மேலூர் வருவாய் கோட்டாச்சியர் அலுவலத்தில் நடைபெறுகிறது.  இந்த அமைதி கூட்டத்தில் அவனியாபுரம் பகுதியில் இல்லாத நபர்களுக்கும், இறந்தவர்களும் உள்ளதால் அவர்களை நீக்கி புதிய கிராம கமிட்டி அமைக்க வலியுறுத்தி  முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர் இது தொடர்ந்து மதுரை தெற்கு தாசில்தார் முத்துப்பாண்டி,அவனியாபுரம் கிராம வருவாய் ஆய்வாளர் பிருந்தா மற்றும் காவல் ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் கிராம கமிட்டி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறனர். இது குறித்து அவனியாபுரம் கிராம கமிட்டி சட்ட ஆலோசகர் அன்பரசு கூறுகையில்அவனியாபுரம்...
தமிழகம்

மதுரை மாநகராட்சி வைகை ஆற்று கரைப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்

மதுரை மாநகராட்சி 100 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள், தெருக்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், வைகை ஆற்றுக் கரைப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகள் நகரமைப்பு பிரிவின் அலுவலர்களால் குழு அமைக்கப்பட்டு, தினந்தோறும் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும், மாநகராட்சி சுகாதார பிரிவின் மூலம் சாலைகளில் இடையூறாக சுற்றி திரியும் கால்நடைகள், குதிரைகள், நாய்கள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு மற்றும் மாநகராட்சி செல்லூர் பணிமனையில் உள்ள காப்பகத்தில் தொடர்ந்து ஒப்படைக்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி வார்டு எண்.43 மற்றும் 49க்கு உட்பட்ட வைகை தென்கரை சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சாலைகள் அமைக்கப் பட்டுள்ளது (ஒபுளாப்படித்துறை சந்திப்பு முதல் குருவிக்காரன் சாலை சந்திப்பு வரை) புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலைகளில்...
தமிழகம்

கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டில் வலசக்கல்பட்டி மெயின் ரோட்டில் இருந்தும் கிருஷ்ணமூர்த்தி காடு முதல் ராமராஜ் காடு வரை சுமார் 21 அடி அகலம் 700 மீட்டர் நீளம் உள்ள மண் சாலையை நில உரிமையாளர்கள் கெங்கவல்லி பேரூராட்சி நிர்வாகத்திற்கு தானமாக ஒப்படைத்தனர்

கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டில் வலசக்கல்பட்டி மெயின் ரோட்டில் இருந்தும் கிருஷ்ணமூர்த்தி காடு முதல் ராமராஜ் காடு வரை சுமார் 21 அடி அகலம் 700 மீட்டர் நீளம் உள்ள மண் சாலையை நில உரிமையாளர்கள் கெங்கவல்லி பேரூராட்சி நிர்வாகத்திற்கு தானமாக ஒப்படைத்தனர் உடன் பேரூர் கழக செயலாளர் சு.பாலமுருகன் பேரூராட்சி மன்ற தலைவர் லோகாம்பாள் துணைத் தலைவர் மருதாம்பாள் நாகராஜ் கவுன்சிலர்கள் முருகேசன் அருண்குமார் தங்கபாண்டியன் சையது, அம்சவர்தனி குமார், லதா,சத்யா செந்தில், கவிதா சேகர் மற்றும் கழக நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம்,செல்வகிளிண்டன், ராஜேந்திரன், ஆரோக்கியசாமி, மணிகண்டன் கலந்து கொண்டனர். செய்தியாளர்: ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் - கெங்கவல்லி...
தமிழகம்

சிவகாசியில், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய முப்பெரும் விழா

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், தேசிய நுகர்வோர் தினவிழா, 22வது ஆண்டு விழா மற்றும் 2023' புத்தாண்டு காலண்டர் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் மாநில தலைவர் சுப்பிரமணியம் தலைமையில், மாவட்ட மகளிர் அணி தலைவர் ஈஸ்வரி, செயலாளர் வேல்குமார், பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் வரவேற்றனர். முப்பெரும் விழாவில் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா, சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கோட்டாட்சியர் விஸ்வநாதன், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய காலண்டரை வெளியிட்டு பேசினார். அவர் பேசும்போது, இந்திய பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட நாளை, தேசிய நுகர்வோர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நுகர்வோர் உரிமைகள் குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டும். எந்தப் பொருட்கள் வாங்கினாலும் அவற்றின்...
தமிழகம்

அமைச்சர் உதயநிதிஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்த வேலூர் எம்.பி.கதிர்ஆனந்த்

வேலூர் திமுக எம்.பி.கதிர் ஆனந்த், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து தனது வாழ்த்துக்களை நேரில் சென்று தெரிவித்தார். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

ராஜபாளையத்தில் தற்கொலை செய்து கொண்ட காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் சார்பில் ரூ. 12.81 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஜோஸ்வா ரஞ்சித் என்பவர் ஶ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த செப்டம்பர் 25ம் தேதி வீட்டின் மாடியறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு அம்மா அமிர்தம்மாள் மற்றும் பள்ளியில் பயிலும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மறைவுக்கு பிறகு இவரது குடும்பத்தினர் வறுமையில் தள்ளப்படுவதை தவிர்க்க, 1997 ம் ஆண்டு 2 வது பேட்சில் இவருடன் பணியில் சேர்ந்த காவலர்கள் சார்பில் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராஜபாளையம் டிஎஸ்பி ப்ரீத்தி மற்றும் ஶ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரி நாதன் மற்றும் நெல்லை, தூத்துக்கு, மயிலாடுதுறை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சக காவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் உயிரிழந்த காவலர் ஜோஸ்வா...
தமிழகம்

தேனியில் மகளிர் குழுக்களுக்கு கடனுதவி

திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்குதல், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருது வழங்குதல் மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் முடிவுற்ற பணிகள் தொடக்க விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தேனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்முரளீதரன் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் மற்றும் வங்கியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணக்குமார், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், மகளிர் திட்ட அலுவலர் ரூபன்ராஜ் டாக்டர்இணை இயக்குனர் பரிமளம்.உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது 11,775 பயனாளிகளுக்கு ரூ.61 கோடியே 476 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டது. செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாரம் பேரூராட்சி தலைவர் சுஜிதா மேரி தலைமையில் நடைபெற்ற தீர்மான கூட்டத்தில் 18 கவுன்சிலர்களில் அதிமுக,திமுக,அமமுக, சுயட்சை உள்ளிட்ட அனைத்து கட்சியின் 11 கவுன்சிலர்கள் பேரூராட்சியில் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டி தீர்மானத்தை நிறைவேற்றாமல் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன இதில் அதிமுக 3  ,திமுக 10 ,அமமுக 1,காங்கிரஸ் 1, சிபிஎம் 1,சுயட்சை 2 உள்ளிட்ட மொத்தம் 18 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று மம்சாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் சுஜிதா மேரி தலைமையில் தீர்மானக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கு வாசிக்கப்பட்டன. இந்நிலையில் மம்சாபுரம் பேரூராட்சியில் பதிவு செய்யப்பட்ட மாதத்திய பிறப்பு இறப்பு மற்றும் பேரூராட்சியின் வரவு செலவுகளுக்கான இரண்டு தீர்மானங்கள் மற்றும் நிறைவேற்றப்பட்டன. மீதமுள்ள எட்டு தீர்மானங்களில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாக துணைத் தலைவர் உள்பட அதிமுக,திமுக,அமமுக,சிபிஎம்,சுயட்சை உள்ளிட்ட அனைத்து கட்சியைச் சார்ந்த 11 கவுன்சிலர்கள் தீர்மானங்களை நிறைவேற்றாமல் பேரூராட்சி அலுவலரிடம் புகர் அளித்து வெளிநடப்பு செய்தனர்.மேலும் இதுவரை நடைபெற்ற 9 தீர்மான...
தமிழகம்

சோழவந்தானில் நேரு யுவகேந்திரா துர்க்கை மகளிர் மன்றம் இணைந்து நடத்திய கிராம மற்றும் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நேரு யுவகேந்திரா நீரத்தான் துர்க்கை மகளிர் மன்றம் இணைந்து நடத்திய கிராம மற்றும் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. ஈட்டி எறிதல், குண்டு எறிதல் ,கோகோ, கபடி ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டியினை காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைவர் சிவபாலன் துவக்கி வைத்தார். நேரு யுவகேந்திரா இணை இயக்குனர் செந்தில்குமார் தலைமை வகித்தார் ஸ்ரீ அன்னை கல்வி அறக்கட்டளை சேர்மன் ஆண்டி முன்னிலை வகித்தார். துர்க்கை மகளிர் மன்ற தலைவி நாகலட்சுமி வரவேற்றார். ஸ்ரீ அன்னை நர்சிங் கல்லூரி முதல்வர் சிலம்பு செல்வி, முதுகலை ஆசிரியர் ராமமூர்த்தி, சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் வாழ்த்துரை வழங்கினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி தமிழ் துறை தலைவர் பெரியசாமி பரிசுகள் வழங்கினார். உடற்கல்வி...
தமிழகம்

கே வி குப்பம் பிடிஓ கோபி, பாலியல் புகாரில் பணி இடை நீக்கம் – வேலூர் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பிடிஓவாகபணி புரிந்து வந்தவர் கோபி.பணி செய்யும் நேரத்தில் குடிபோதையில் வருவதும் பெண் ஊழியர்களிடம் நெருங்கி பழகுவதும் வாடிக்கையாகக் கொண்டு இருந்தார் இதன் காரணமாக பெண் ஊழியர்கள் அச்சத்துடன் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தனர் இந்த நிலையில்சம்பவத்தன்றுஒரு பெண் ஊழியரிடம் பிடிஓ கோபி மதுபோதையில் அத்து மீறியதாகபுகார் கூறப்பட்டது.இந்த சம்பவம் துறைரீதியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த விசாரணையில் பிடிஓ கோபிபாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது அதன் அடிப்படையில் வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பிடிஓவைபணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் .கே வி குப்பம் பிடிஓ அலுவலகத்தில் இந்த சம்பவம் அரசு ஊழியர்கள் இடத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
1 350 351 352 353 354 557
Page 352 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!