தமிழகம்

தமிழகம்

குற்றாலம் அருவியில் தண்ணீரில் சிக்கிய குழந்தை; துணிச்சலுடன் மீட்ட இளைஞருக்கு பொதுமக்கள் பாராட்டு

பழைய குற்றாலம் அருவியில் திடீரென விழுந்து தண்ணீரில் சிக்கிக்கொண்ட குழந்தை மீட்கப்பட்டது. துணிச்சலுடன் குழந்தையை மீட்ட இளைஞருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் பாலக்காட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது குழந்தை ஹரிணி (வயது 4) அருவியின் முன்புறம் தண்ணீர் விழும் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தது. திடீரென குழந்தை அருவியின் தண்ணீர் வெளியேறும் இடத்தில் உள்ள துவாரத்தின் வழியாக கீழே விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. உடனே அங்கு நின்று கொண்டிருந்த விளாத்திகுளம் இளைஞர் விஜயகுமார் துணிச்சலுடன் சென்று பாறையின் இடுக்கில் பிடித்துக் கொண்டு நின்ற குழந்தையை மீட்டு மேலே தூக்கி வந்தார். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில்...
தமிழகம்

பணிமனைக்கு சென்ற பேருந்து மீது இருசக்கர வாகனத்தில் மோதிய முதியவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதி

மதுரை காளவாசல் புறவழிச் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலகம் உள்ளது இங்கு நேற்று இரவு பத்து முப்பது மணி அளவில் பேருந்துகள் ஒவ்வொன்றாக பணிமனைக்குள் வந்து கொண்டிருந்தது அப்பொழுது மதுரை கோவில் பாப்பா குடியை சேர்ந்த திருநாவுக்கரசு வயது 60 இவர் பழங்காநத்தம் இருந்து காளவாசல் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது பணிமனைக்கு பணியை முடித்து பேருந்துகள் ஒவ்வொன்றாக உள்ளே வந்து கொண்டிருந்தது. அப்பொழுது பணிமனைக்கு சென்று விட்டு வந்த அரசு பேருந்து மீது பின் படிக்கட்டு பகுதியில் பலமாக இவர் மோதினார். இதில் நிலைகுலைந்த அவர் படுகாயம் அடைந்தார். அப்பொழுது பணி முடிந்து வீட்டுக்கு செல்ல தயாராக இருந்த அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் உடனடியாக 108 அவசரகால ஊர்தி தகவல் தெரிவிக்கப்பட்டு...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பு. மலைவாழ் மக்களின் குழந்தைகளைக் கொண்டு, வீடுகளை திறக்கச்செய்த ஆட்சியர்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள அத்திக்கோயில் பகுதியில், சுமார் 30க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மலைவாழ் மக்கள் வசிப்பதற்கான புதியதாக வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. தமிழக அரசும், ராம்கோ நிறுவனமும் இணைந்து 12 பசுமை வீடுகளை கட்டி முடித்துள்ளனர். மலைவாழ் மக்கள் புதிய வீடுகளில் குடியேறும் விழா, மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, புதிய வீடுகளை மலைவாழ் மக்களின் குழந்தைகளைக் கொண்டு திறந்து வைத்தார். ஆட்சியர், தங்களது குழந்தைகளைக் கொண்டு வீடுகளை திறந்து வைத்த நிகழ்ச்சி மலைவாழ் மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் அனைவரும் ஆரவாரமாக கைகளைத் தட்டி ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் ஆட்சியர் மேகநாதரெட்டி பேசும்போது, மலைவாழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது....
தமிழகம்

சாத்தூரில், அடுத்தடுத்து 2 கடைகளின் மேற்கூரையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள படந்தால் பகுதியைச் சேர்ந்தவர் சமுத்திரராஜ் (58). இவர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் இரும்புப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கிறார். இவரது கடையின் அருகில், வெங்கடாசலபுரம் பகுதியைச் சேர்ந்த அழகுராஜ் (50), இருசக்கர வாகனங்கள் உதிரிபாகங்கள் விற்பனை கடை வைத்துள்ளார். நேற்று இரவு இருவரும் வழக்கம் போல வியாபாரம் முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டனர். இன்று காலையில் சமுத்திரராஜ் கடையை திறந்தபோது, அவரது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு கடையின் மேஜையில் வைக்கப்பட்டிருந்த பணம் திருட்டு போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். சற்று நேரத்தில் அழகுராஜ் தனது கடைக்கு வந்து கடையை திறந்தபோது, அவரது கடையின் கூரையும் உடைக்கப்பட்டு கடையில் வைத்திருந்த பணம் மற்றும் பொருட்கள் திருடு போனதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து இருவரும் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்....
தமிழகம்

பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் தெரு நாய்களை பிடிக்க சென்ற மாநகராட்சி ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபர்; சமூக வலைதளங்களில் வீடியோ காட்சி வெளியானதால் பரபரப்பு

மதுரையில் கடந்த 3 ஆண்டுகள் கொரோனா தொற்று பரவல் காரணமாக தெரு நாய்கள் மாநகராட்சி சார்பாக பிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக மாவட்ட அளவில் தெரு நாய்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து உள்ளது.  குறிப்பாக தெரு நாய்கள் முதியோர்- சிறுமிகள் உள்பட பலரையும் கடித்து வருகிறது. மதுரை மாநகராட்சி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே பெரும்பாலும் வெறி நாய் கடி தடுப்பூசி மருந்துகள் உள்ளன. எனவே பொதுமக்கள் பாதிக்கப்பட்டவரை அழைத்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு அலைந்து திரிய வேண்டி உள்ளது. இந்த நிலையில் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள தைக்கால் தெருவில் சுற்றித் திரியும் தெரு நாய்கள், இரண்டு சிறுமிகளை கடித்து குதறி விட்டன. எனவே அந்தப் பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவர், இது தொடர்பாக மதுரை மாநகராட்சி வாட்ஸ்ஆப் புகார் எண்ணுக்கு புகார்...
தமிழகம்

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டிக்காக 8க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் திருநங்கைகள்

தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் வகையில் ஜல்லிகட்டு போட்டியிலும் தடம் பதிக்கும் எண்ணத்தில் காளை வளர்ப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளனர். தமிழர்களின் வீரத்தை ஆண்களும், பெண்களும் மட்டுமல்ல மூன்றாம் பாலித்தவரான நாங்களும் பிரதிபலிப்போம் என்பதை நிருபிக்கும் வகையில் இளைஞர்களுக்கு நிகராக ஜல்லிக்கட்டு காளைகளை போட்டிக்கு பார்த்து பார்த்து தயார் செய்து வருகின்றனர் மூன்று திருநங்கைகள். தமிழர்களின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிகட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கான காளைகளை வளர்ப்பதில் மதுரை மாவட்டத்தில் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வம்காட்டி தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளும் ஜல்லிகட்டு காளைகளை ஆர்வமுடன் வளர்க்க தொடங்கியுள்ளனர். அந்தவகையில் மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்த கீர்த்தனா, அக்சயா, பிரியாமணி உள்ளிட்ட திருநங்கைகள் 8க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகின்றனர். இதில் நான்கடவுள், அவன்இவன்,...
தமிழகம்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் மாடுபிடி வீரர்கள் – இலவச மாடுபிடி பயிற்சி மையம் மூலம் பயிற்சி வழங்கும் மாடுபிடி வீரர்

மதுரையில் உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு 16ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் நடைபெறவுள்ள நிலையில் மாடுபிடி வீரர்களும் மாடுபிடிப்பதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். தற்காலிக வாடிவாசல் அமைப்பை உருவாக்கி அதில் ஜல்லிக்கட்டு மாடுகளை அவிழ்த்துவிட்டு மாடுபிடி வீரர்கள் அடக்கி பயிற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். மதுரை கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த முடக்காத்தான் மணி என்ற மாடுபிடி வீரர் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் என்ற உருவாக்கி அதன் மூலமாக கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்படுகிறது. செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் பிரபல ரவுடி ஜெயகுமார்(எ) கொக்கிகுமார் என்பவரது தலையில் கல்லைப் போட்டு கொலை மர்ம நபர்கள் வெறிச்செயல் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் விசாரணை

மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடியான ஜெயகுமார்(எ) கொக்கிகுமார் இவர் மீது பல்வேறு வழக்கு உள்ளது.  இந்நிலையில் இன்று மாலை ரவுடி ஜெயகுமார் மீது தலையில் கல்லை போட்டு கொலை செய்து மர்ம நபர்கள் தப்பியோட்டம். தகவலறிந்து வந்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குபதிவு விசாரணை செய்தனர்.  மேலும் இறந்த கொக்கி குமார் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின்முதல் கட்ட விசாரணையில் கொக்கி குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் நாகமலைபுதுக்கோட்டை அரசு மாணவர் விடுதி காலியிடத்தில் நேற்று குடி போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கொக்கி குமார் அப்பகுதி இளைஞர்களின் செல்போனை எடுத்ததாக கூறப்படுகிறது.  தனை தொடர்ந்து இன்று மாலை அதே இடத்தில் ஏற்பட்ட வாய்தகராறில் கைகலப்பாக மாறியது இதில் 5 பேர் கொண்ட கும்பல்...
தமிழகம்

மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை.சமயநல்லூரில் லாரி மோதியதில் சம்பவ இடத்தில்.லோடுமேன் பலி

மதுரை செல்லூரைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவரது மகன் அஜித்குமார்(22) லோடுமேன் வேலைக்காக மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையான சமயநல்லூரில் வாகனங்களை மறித்து அதில் ஏறி தினசரி லோடுமேன் வேலை பார்ப்பது வழக்கம் இன்று மதியம் லோடுமேன் வேலை பார்ப்பதற்காக மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையான சமயநல்லூரில் வாகனங்களை மறித்து வேலை கேட்டுக் கொண்டிருந்தார்.  அப்போது எதிர்பாராத விதமாக எதிர் திசையில் இருந்து வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். வாகனங்களை மறிக்கும் போது லாரியின் டயரில் சிக்கி பலியான விஜயகுமாரின்.உடலை பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக இருந்தது ஏற்கனவே இன்று அதிகாலை பெங்களூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சென்ற தனியார் வாகனம் தடுப்பு சுவரில் மோதியதில் பாட்டியும் பேரனும் பலியான நிலையில் அதே இடத்தில் அடுத்தடுத்து விபத்து நடந்தது பொது மக்களை அதிர்ச்சிக்கு ள்ளாக்கியுள்ளது. மேலும், இந்த...
தமிழகம்

மதுரை – திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் 70க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் – விளர்ச்சேரி அருகே கலைஞர் நகர் குடியிருப்பு வாசிகளுக்கு பொதுப் பாதை இல்லாமல், தனி நபர் ஆக்கிரமித்துள்ளதற்கு எதிர்ப்பு.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கலைஞர் நகர் குடியிருப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது . பல ஆண்டுகளாக வசித்து வரும் குடியிருப்பு வாசிகளுக்கு , கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனி நபர் அக்குடியிருப்பவாசிகள் செல்லும் பொது பாதையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட முயற்சி செய்ததால், இது குறித்து காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு கலைஞர் நகர் குடியிருப்பு வாசிகள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல், அலட்சியப்படுத்தியதால்,  மதுரை - திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் மூலக்கரை என்ற இடத்தில் , 70க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்களுக்கு உரிய பாதை அமைத்து தரக்கோரி போராட்டத்தில் குரல் எழுப்பினர் .  இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததற்கு பின் போராட்டத்தை கைவிட்டனர். இப் போராட்டத்தினால் அங்கு...
1 349 350 351 352 353 557
Page 351 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!