குற்றாலம் அருவியில் தண்ணீரில் சிக்கிய குழந்தை; துணிச்சலுடன் மீட்ட இளைஞருக்கு பொதுமக்கள் பாராட்டு
பழைய குற்றாலம் அருவியில் திடீரென விழுந்து தண்ணீரில் சிக்கிக்கொண்ட குழந்தை மீட்கப்பட்டது. துணிச்சலுடன் குழந்தையை மீட்ட இளைஞருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் பாலக்காட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது குழந்தை ஹரிணி (வயது 4) அருவியின் முன்புறம் தண்ணீர் விழும் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தது. திடீரென குழந்தை அருவியின் தண்ணீர் வெளியேறும் இடத்தில் உள்ள துவாரத்தின் வழியாக கீழே விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. உடனே அங்கு நின்று கொண்டிருந்த விளாத்திகுளம் இளைஞர் விஜயகுமார் துணிச்சலுடன் சென்று பாறையின் இடுக்கில் பிடித்துக் கொண்டு நின்ற குழந்தையை மீட்டு மேலே தூக்கி வந்தார். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில்...
