தமிழகம்

தமிழகம்

கேஒய்சி பதிவேற்றிய கல்லூரி மாணவிகள்

கெங்கவல்லி வேளாண்மை துறை சார்பில் வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா வேளாண்மை அலுவலர் கல்பனா சந்திரசேகர் தலைமையில் விவசாயிகளுக்காக மத்திய அரசால் வழங்கப்படும் பிரதமரின் மந்திரி கவுரவ நிதி உதவி திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வீதம் முன்று சம தவணைகளில் ஆண்டுக்கு 6000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவியை பெற விவசாயிகள் இ-கேஒய்சி பதிவேற்றம் செயப்பட வேண்டும் கேஒய்சி செய்த விவசாயிகள் நிதி உதவி தொடர்ந்து வழங்கப்படவும் முகாமில் முசிறி எம் ஐ டி வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகளால் இ-கேஒய்சி பதிவேற்றம் செய்து தரப்பட்டது இது குறித்து மேலும் தகவல் பெற விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் அணுகி பயன்பெறலாம் . செய்தியாளர்: ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் - கெங்கவல்லி...
தமிழகம்

வேலூர் இரவு நேரத்தில் 6 வழிச்சாலையில் ஜொலிப்பு

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை (6 & 8) யில் வேலூர் மாநகரம் அமைந்துள்ளது. இன்று 22-ம் தேதி வியாழக்கிழமை இரவு இந்த காட்சி பதிவு செய்யப்பட்டது. இந்த ரம்மியமான காட்சிதான் நம்ம ஊரு வேலூர் என்கின்றனர் வேலூர் வாசிகள். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ நாவலுக்கு 2022-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிப்பு

மத்திய அரசின் இலக்கிய அமைப்பான சாகித்திய அகாதெமி ஆண்டுதோறும் 22 இந்திய மொழிகளில் வெளியாகும் நூல்களுக்கு சாகித்திய அகாதெமி விருதினை வழங்கி வருகிறது. 2022-ஆம் ஆண்டிற்கு விருது தமிழில் வெளியான டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ எனும் நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள மு.ராஜேந்திரன், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள வடகரையில் பிறந்தவர். மதுரை உயர்நீதிமன்றத்தில் மூன்றாண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றியவர், பின்னர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர், தமிழக வேளாண்மைத் துறை ஆணையர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். வேளாண்மைத் துறை ஆணையராக இருந்தபோது தமிழகத்தின் மிக அதிகமான உணவு உற்பத்திக்கான பாரதப் பிரதமர் வழங்கிய விருதினை (ரூ.9 கோடி) மூன்றாண்டுகள் தொடர்ந்து பெற்றிருக்கிறார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து ‘கிரிஷி கர்மான்...
தமிழகம்

ஜெகோவா நிசி பவுண்டேஷன் மூலம் குடிசைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவி

தென்காசி மாவட்டம் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பின்புறம் குடிசைப்பகுதியில் வாழும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு ஜெகோவா நிசி பவுண்டேசன் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.  ஏழை மாணவர்களுக்கு  கல்வி உபகரணங்கள், விதவைப்பெண்களுக்கு புதிய ஆடை, மற்றும் அவர்களுக்கு தேவையான‌ சமையல் மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியை ஜெகோவா நிசி பவுன்டேஷன் நிறுவனர் இம்மானுவேல் பிரசாத் அவர்கள் துவங்கி வைத்தார்.  தென்காசி நகர் மன்ற தலைவர் R.சாதிர் மற்றும் தென்காசி நகர்மன்ற துணை தலைவர் KNL சுப்பையா, 20வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் M.செய்யது சுலைமான் ரஃபீக், 3வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கல்பனா கங்காதரன், பசியில்லா தமிழகம் நிறுவனர் முகம்மது அலி ஜின்னா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். தென்காசி நகர் மன்ற தலைவர் திரு R.சாதிக் அவர்கள் அந்த பகுதியில் உள்ள இரண்டு...
தமிழகம்

பாலமேடு அருகே சாத்தியார் அணையின் கொள்ளளவை உயர்த்த வெங்கடேசன் எம் எல் ஏ விடம் விவசாயிகள் கோரிக்கை.

மதுரை அலங்காநல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் பாலமேடு சாத்தியார் அணைபாசன விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட சோழவந்தான்தொகுதியின் எம்.எல்.ஏ வெங்கடேசன் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுகொண்டார். அப்போது பேசிய விவசாயிகள் ;- சாத்தியார் அணை 1965 ம் ஆண்டு கட்டபட்டது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரே அணை இதுவாகும். ஆனால் 26 அடி உயரம் கொண்ட சாத்தியார் அணையை இதுவரை தூர்வாராமல் இருப்பதால் அணைக்குள் 15 அடிக்கு வண்டல் மண் நிரம்பியுள்ளது. இதனால் முழுமையாக தண்ணீரை தேக்க முடியவில்லை. மழை அதிகமாக பொழியும் காலங்களில் 10 பாசன கணமாய்கள் நிரம்பிய நிலையிலும், உபரிநீரை தேக்கமுடியாமல் வீட்டடி நிலங்களில் தண்ணீர் பாய்ந்து வீணாகிறது. இதனை தடுக்க அணையின் நீர்பிடிப்பு பகுதியை அதிகரித்து கொள்ளளவை உயர்த்த வேண்டும். இதற்கு அணையின் அருகே உள்ள சிறிய...
தமிழகம்

சோழவந்தானில் பேரூர் திமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் கழக திமுக அமைப்பாளர்கள் அணி அமைப்பாளர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனை கூட்டம்சோழவந்தானில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பேரூர் கழகச் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை வகித்தார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பசும்பொன் மாறன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி சேர்மன் ஜெயராமன் பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், ஒன்றிய நிர்வாகிகள் பெரியகருப்பன் ராஜா, நீலமேகம், பேரூர் துணைச் செயலாளர்கள் கொத்தாளம் செந்தில், ஸ்டாலின், செல்வராணி, பேரூராட்சி கவுன்சிலர்கள் நிஷா கௌதம ராஜா, முத்துச்செல்வி சதீஷ், மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், முன்னாள் துணைச் சேர்மன் அண்ணாதுரை, மில்லர், தகவல் தொழில்நுட்ப அணி பார்த்திபன் மற்றும் சங்ககோட்டை சந்திரன் உள்பட நிர்வாகிகள்...
தமிழகம்

சிவகாசியில், 37வது தேசிய புத்தகக் கண்காட்சியை, மேயர் துவக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், ஆண்டு தோறும் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை சிறப்பாக நடைபெறும். நேசனல் புக் டிரஸ்ட் இந்தியா, விருதுநகர் மாவட்ட நூலக ஆணைக்குழு மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் 37வது புத்தகக் கண்காட்சியை, சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் துவக்கி வைத்தார். புத்தகக் கண்காட்சி திறப்பு விழா நிகழ்ச்சி தொழிலதிபர் கணேஷ்குமார் தலைமையில், பிரபல மருத்துவர் ஞானகுருசாமி முன்னிலையில் நடைபெற்றது. நேசனல் புக் ஹவுஸ் மதுரை மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். புத்தக விற்பனையை மாநகராட்சி துணை மேயர் விக்னேஷ்பிரியா துவக்கி வைத்தார். முதல் விற்பனையை அரசு கலைக் கல்லூரி முதல்வர் காந்திமதி பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் காளீஸ்வரி கல்லூரி முதல்வர் பாலமுருகன், இந்து தேவமார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணசாமி, அச்சுப்பணியாளர் சூரியநாராயணன் உட்பட பலர் கலந்து...
தமிழகம்

ராஜபாளையம் அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள கோழிப்பண்ணையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட இனாம் கோவில்பட்டி இந்திரா காலனி பகுதியில் சுமார் 30 குடும்பங்களை நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஐந்து வருடங்களாக பழனிச்சாமி என்பவர் கோழி பண்ணை நடத்தி வருகிறார்.  அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோழிப்பண்ணை அமைப்பதற்கு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். மேலும் கோழி பண்ணை ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து இறந்த கோழிகளை அப்புறப்படுத்துவது கோழி கழிவுகளை சுகாதாரத்திற்க்கு கேடு விளைவிக்கும் விதமாக சாலைகளில் வீசுவது போன்ற செயல்பாட்டினால் பல்வேறு விதமான நோய் தொற்று ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இவ்வாறு இறக்கும் கோழிகளை நாய்கள் இழுத்துக் கொண்டு வந்து குடியிருப்பு பகுதியில் வீசி செல்வதால் ஈக்கள் மற்றும் கொசு தொல்லை அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு உட்பட பல்வேறு நோய் தாக்கம்...
தமிழகம்

திருச்சியில் நடந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற ராஜபாளையத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

38 வது மாநில அளவிலான பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள், திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 8ம் தேதி முதல் 10 ம் தேதி வரை நடைபெற்றது. போட்டிகளில் திருப்பூர், தென்காசி, சென்னை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 40 அணியினர் கலந்து கொண்டனர். இப் போட்டியில் கலந்து கொண்ட விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது. தனியார் பள்ளி கலையங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், பள்ளி தாளாளர், நிர்வாகிகள், ஆசிரியைகள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநில அளவில்...
தமிழகம்

மதுரை மன்னர் கல்லூரியில் கணிதமேதை சீனிவாச ராமானுஜம் பிறந்த தினத்தை முன்னிட்டு 1729 மாணவர்கள் கலந்து கொண்ட கலாம் புக் ஆப் ரெகார்டு கணித சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை மன்னர் கல்லூரியில் கணிதமேதை சீனிவாச ராமானுஜம் அவர்களின் 135வது பிறந்ததினத்தினை முன்னிட் டு தேசிய கணித தினம் கொண்டாப்பட்டது. எண் கணித்தில் சீனிவாச ராமானுசம் 1729 என்ற எளிய எண் மூலம் 2 வேறு வகையான கணித தீர்வுகள் கண்டதால் அதனை போற்றும் விதமாக 1729 கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட கணித சாதனை நிகழ்ச்சி கலாம் புக் ஆப் வேர்ல்டு ரொக்கார்டு மூலம் பதிவு செய்யப்பட்டது. கணிதத்து துறையில் 1729 என்ற எண் பிளாக் எண் (கருப்பு எண் என அலைக்கப்பட்டது. இதனை கணித மேதை சீனிவாச இராமனுஜம் எளிய முறையில் 1729 என்ற எண்ணை மாற்றும் விதமாக மாற்றி 2 வழியில் கணித தீர்வு கண்டார். அதனை போற்றும் விதமாக 1729 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்ட கலாம் புக்...
1 350 351 352 353 354 546
Page 352 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!