தமிழகம்

தமிழகம்

தலைமையாசிரியருக்கு பிரம்பு வாங்கிக் கொடுத்து தனது மகனை பள்ளியில் சேர்த்த புதுமையான பெற்றோர்

பள்ளி தலைமையாசிரியருக்கு 4 அடி உயரமுள்ள பிரம்பு ஒன்றை வாங்கிக் கொடுத்து தனது மகனை பள்ளிக்கூடத்தில் சேர்த்த புதுமையான பெற்றோர். ஆசிரியரிடம் பிரம்படி பெறும் மாணவர்களே வாழ்க்கையில் முன்னுக்கு வருவர் எனவும் பேட்டி. மதுரை மாநகர் செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன். இவரது மனைவி தமிழரசி. இந்த பெற்றோர் தங்களது 4 வயது மகன் சக்தியை செல்லூர் பகுதியிலுள்ள மனோகரா நடுநிலைப்பள்ளியில் எல்கேஜி வகுப்பில் புதிதாக சேர்த்தனர். அப்போது பள்ளித் தலைமையாசிரியர் பால் ஜெயக்குமாருக்கு 4 அடி உயரமுள்ள பிரம்பு ஒன்றை வழங்கியதோடு, தங்கள் மகன் தவறு செய்தால் இந்தப் பிரம்பால் தாங்கள் தங்களை பிள்ளையைத் தண்டிக்கலாம் என்ற உறுதிமொழி மனுவையும் வழங்கியுள்ளனர். இதுகுறித்து சங்கரபாண்டியன், தமிழரசி ஆகியோர் கூறுகையில், தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பு கொண்டு அடித்துத் திருத்த வேண்டும். அப்போதுதான்...
தமிழகம்

ராஜபாளையம் அருகே கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் கூலி உயர்வு கோரி ஏஐசி, சிஐடியு விசைத்தறி தொழிலாளர்கள் நாளை(திங்கட்கிழமை) முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது‌. ராஜபாளையம் அருகே தளவாய்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த தறிக்கூடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். விசைத்தறி தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு குறித்து ஒப்பந்தம் போடப்படும். ஒப்பந்தம் 12.8.21 வரை முடிவடைந்துவிட்டது. ஒப்பந்தம் முடிந்து 18 மாதங்கள் ஆகியும் இதுவரை கூலி உயர்வு வழங்கவில்லை‌. ‌தற்போது ஒப்பந்த கூலி உயர்வு கோரி கடந்த ஜன‌.20ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் விசைத்தறி உற்பத்தியாளர்கள் மூன்று கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் கூலி உயர்வு வழங்க முன்வரவில்லை....
தமிழகம்

சிவகாசி தாலுகா அலுவலகத்தில், வட்ட வழங்கல் துறை சிறப்பு முகாம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா அலுவலகத்தில், சிவகாசி வட்டம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் குடிமை பொருள் வழங்கல் பிரிவில், குறைதீர் சிறப்பு முகாம் நடைபெற்றது. சிவகாசி வட்ட வழங்கல் அலுவலர் ஜெயப்பாண்டியன் தலைமையில், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநில தலைவர் சுப்பிரமணியம் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பெயர் திருத்தம், நகல் கார்டு, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், தொடர்பு எண் இணைத்தல் என மொத்தம் 42 மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி, சான்றுகள் சரிபார்த்து தீர்வு செய்து உரிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

கேரட், பீட்ரூட்டை சமவெளியில் சாகுபடி செய்து மண் காப்போம் இயக்கம் சாதனை – விவசாயிகளுக்கு வழிகாட்டும் ஈஷாவின் மாதிரி பண்ணை

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் விளையும் கேரட் மற்றும் பீட்ரூட்டை சமவெளியில் வெற்றிகரமாக சாகுபடி செய்து ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சாதனை படைத்துள்ளது. இது தொடர்பாக அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் கூறுகையில், “எங்களுடைய மண் காப்போம் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இயற்கை விவசாய பயிற்சிகளை மாதந்தோறும் நடத்தி வருகிறோம். அதுமட்டுமின்றி கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, தஞ்சாவூர் ஆகிய 4 இடங்களில் மாதிரி பண்ணைகளை உருவாக்கி பராமரித்து வருகிறோம். மொத்தம் 60 ஏக்கர் பரப்பில் பல்வேறு விதமான பயிர்களை பரிசோதனை முயற்சியாக வெவ்வேறு இயற்கை நுட்பங்களை பயன்படுத்தி பயிர் செய்து வருகிறோம். அந்த வகையில், கோவையில் செம்மேடு கிராமத்தில் உள்ள எங்களுடைய மாதிரி பண்ணையில் மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையும் கேரட் மற்றும் பீட்ரூட்டை தலா 30 சென்ட் என்ற பரப்பளவில் பிரதான பயிராக...
தமிழகம்

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை 2-வது புத்தகத் திருவிழா மற்றும் இலக்கியத் திருவிழாவினை தொடங்கி வைத்தார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை நகர், மன்னர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 2-வது புத்தகத் திருவிழா மற்றும் இலக்கியத் திருவிழாவினை ,  மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப சிதம்பரம், முன்னிலையில் திறந்து வைத்தார்.  இந்நிகழ்களின் போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவிக்கையில்,  சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வரலாற்று சிறப்புக்கள் உள்ளது. அதில் கூடுதலாக, சிறப்பு சேர்க்கின்ற வகையில், தற்போது சிவகங்கையில், கடந்தாண்டு வெகு சிறப்பாகவும், பிற மாவட்டங்களுக்கு முன்மாதிரியாகவும் திகழும் வகையில் நடைபெற்ற புத்தகத் திருவிழா சிவகங்கை மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர், பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்;து, இவ்வாண்டும் 2-வது புத்தகத் திருவிழாவினை பபாசி நிறுவனத்துடன் இணைந்து சிறப்பாக தொடங்கியுள்ளார்கள். அதனுடன் இலக்கியத் திருவிழாவும் அரசின் அறிவுரையின்படி இணைந்து நடத்தப்படுகிறது.  புத்தகம் என்பது வாழ்க்கையின் முக்கிய அங்கமாகவும்,...
தமிழகம்

மதுரை மாநகரில் நடந்த குற்ற சம்பவங்கள்

பெரியார் பேருந்து நிலையம் அருகே மயங்கி விழுந்தவர் பலி  சிவகங்கை கஞ்சிராங்கன் ஊரைச் சேர்ந்தவர் கணேசன் 54. இவர் மதுரை வந்திருந்தார். பெரியார் பேருந்து நிலையத்தில் பாத்ரூம் அருகே சென்றபோது திடீரென்று மயங்கி விழுந்து பலியானார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மகன் பிரகாஷ் திடீர் நகர் போலீஸ் புகார் செய்தார். போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து கணேசன் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாண்டி கோவில் அருகே அப்பார்ட்மெண்டில் வீடு புகுந்து பத்தரை பவுன் நகை திருட்டு பாண்டி கோவில் அருகே அப்பார்ட்மெண்டில் வீடு புகுந்து பத்தரை பவுன் தங்க நகை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். பாண்டிகோவில் அருகே அபார்ட்மெண்டில் வசித்துவருபவர் முருகேசன் மகன் ஹரிஷ் குமார் 36....
தமிழகம்

திருமங்கலம் அருகே ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற 88 வது ஆண்டு பூஜை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதம் – பிரியாணி திருவிழா என்று அழைக்கப்படும் இரண்டு நாட்களாக கம கம பிரியாணி வாசனையில் தத்தளிக்கும் கிராமம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டி கிராமத்தில் , ஸ்ரீ முனியாண்டி சுவாமி - க்கு தாய்க் கிராமமாக கருதப்படும் இக்கிராமத்தில் இருந்து பிடிமண் எடுக்கப்பட்டு ஆங்காங்கே ஸ்ரீ முனியாண்டி சுவாமி - க்கு திருக்கோயில் அமைந்ததாக வரலாறு கூறப்படுகிறது .  இந்நிலையில் ஆண்டு தோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று திருக்கோயிலில் ஸ்ரீ முனியாண்டி விலாஸ் பெயரில் உணவகம் நடத்தும் தொழில் அதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் இரண்டு நாட்களாக கடைக்கு விடுமுறை அளித்து , இக்கிராமத்தில் குடும்பத்துடன் ஒன்று கூடி சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்வதுடன், முன்னதாக நேற்று இரவு ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களது வீட்டில் இருந்து சுவாமிக்கு பூஜை பொருட்களான பழங்கள், மலர் உள்ளிட்டவற்றை தலைசுமையாக ஊர்வலமாக எடுத்து புறப்பட்டு, திருக்கோயிலை அடைந்து பூஜை நடத்தினர். இவ்விழாவிற்காக ஸ்ரீ முனியாண்டி விலாஸ் பெயரில்...
தமிழகம்

சிவகாசி அருகே, தனியார் நூற்பாலை திறப்பு விழா – அமைச்சர் தங்கம்தென்னரசு துவக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி - எம்.புதுப்பட்டி அருகேயுள்ள செவலூர் பகுதியில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 78 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தனியார் நூற்பாலை அமைக்கப்பட்டது. இந்த புதிய நூற்பாலையை, மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம்தென்னரசு பேசும்போது, தமிழ்நாடு அரசின் தொழில்துறை அங்கமான வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒற்றைச் சாளர வசதிகள் வழங்கிடும் முகமையாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டிற்கு முதலீட்டு வாய்ப்புகளை ஈர்த்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், கடந்த ஆண்டு நடைபெற்ற தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சிவகாசி அருகேயுள்ள செவலூரில், ஸ்ரீசர்வலோகா நூற்பாலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 78 கோடி ரூபாய்...
தமிழகம்

கவர்னர் விருது பெற்ற, மாவட்ட தேர்தல் தனி வட்டாட்சியருக்கு, மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய வாக்காளர் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், கடந்த 2022ம் ஆண்டிற்கான தேர்தல் நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக மாவட்ட தேர்தல் தனி வட்டாட்சியர் மாரிச்செல்வி, சிறந்த வாக்குச்சாவடி நிலை அலுவலராக பணியாற்றிய முருகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். ஆளுநரிடம் விருது பெற்ற தனி வட்டாட்சியர் மாரிச்செல்வி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியை சந்தித்து, விருதுகளை வழங்கி வாழ்த்துகள் பெற்றார். ஆட்சியர் அலுவலக அலுவலர்கள், தனி வட்டாட்சியருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

வட இந்தியர்கள் உங்களை விரட்டி விரட்டி அடிப்பார்கள் அப்போது சீமானை தேடுவீர்கள். சாதிவாரி கணக்கெடுக்க வேண்டும். -சீமான் பேச்சு

மறைந்த புலவர் தமிழ் கூத்தன் நினைவேந்தல் கூட்டம் மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கட்சி...
1 295 296 297 298 299 546
Page 297 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!