ஹைக்கூக் கவிதைகள் – பட்டியூர் செந்தில்குமார்
1. பூத்திருக்கும் தும்பைச் செடியில் அதோ! பறந்து போகும் பட்டாம்பூச்சி வாசம் 2. செடியில் வண்ணத்துப்பூச்சி பிடிக்க ஓடும் சிறுமியின் மடியிலிருந்து விழும் பூக்கள் 3. கைகட்டி நடுங்கியபடி பார்த்துக் கொண்டிருக்கிறேன் மலரில் பனித்துளிகள் 4. மாடு தொலைந்த இரவு தேடி அலையும் திசையெல்லாம் கேட்கும் மணியோசை 5. குளிர்கால அதிகாலை பனிமலைகள் பனிமலைகள் அடடா, பாலைவன மணல்மேடுகள் 6 நெகிழிப் போத்தல் தண்ணீரைக் குடிக்கும்போதெல்லாம் சலசலக்கும் ஒரு நதி...