தமிழகம்

உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்த நாளை முன்னிட்டு கெங்கவல்லி பேரூர் திமுக சார்பில் விழா நடைபெற்றது

130views
மாநில இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்த நாளை முன்னிட்டு கெங்கவல்லி பேரூர் திமுக சார்பில் கெங்கவல்லியில் அமைந்திருக்கும் பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
கெங்கவல்லி பேரூர் கழக செயலாளர் திரு. பாலமுருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், சேலம் கிழக்கு மாவட்ட கழக துணை செயலாளர் திரு சின்னதுரை Ex.MLA அவர்களும், ஒன்றிய கழக செயலாளர் திரு. சித்தார்த்தன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்வில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் திரு. பிரகாஷ், கெங்கவல்லி பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி. லோகாம்பாள், துணைத் தலைவர் திருமதி. மருதம்பாள் நாகராஜ், கவுன்சிலர்கள் முருகேசன், தங்கபாண்டியன், அருண்குமார், சையது,ஹம்சவர்தினி குமார்,சத்யா செந்தில் ,லதா மற்றும் அண்ணாதுரை,கருப்பண்ணன், சிட்டிபாபு,பாலசுப்பிரமணியம், செல்வகிளிண்டன், மூர்த்தி, ராஜேந்திரன், ஆரோக்கியசாமி,தனசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி வட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!