தமிழகம்

சோழவந்தான் ஐயப்பன் கோவில்ஆராட்டு விழாவையொட்டி அதிமுக ஓபிஎஸ் அணி சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது

87views
மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஐயப்ப பக்தர்கள் கடந்த கார்த்திகை மாதம்1ம் தேதி மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். தொடர்ந்து தினந்தோறும் மாலை ஐயப்பன் கோவிலில் பஜனை பாடல்களை பாடி தங்களது வழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றனர். இன்று நடைபெற்ற ஆராட்டு விழாவில் வட்ட பிள்ளையார் கோவில் அருகே உள்ள வைகை ஆற்றில் ஐயப்பன் நீராடி சிறப்பு அலங்காரத்தில் கஜமுக வாகனத்துடன் ரயில்வே பீடர் ரோடு, மார்க்கெட் ரோடு, வழியாக செண்டை மேளம் அதிர்வேட்டுகள் முழங்க ஊர்வலமாக வந்து திருக்கோவிலிலை அடைந்து ஆராட்டு விழா நடைபெற்றது.
ஐயப்பன் கோவில் ஆராட்டு விழாவில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது நிர்வாகிகள் முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் திரவியம் ராமசாமி மற்றும் சோழவந்தான் பேரூர் கழகம் வாடிப்பட்டி ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!