தமிழகம்

பள்ளி மாணாக்கருக்கு குற்ற தடுப்பு விழிப்புணர்வு

43views
பள்ளி மாணாக்கருக்கு மெரைன் போலீஸ் ஸ்டேஷன்களின் பணி, பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு, போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் மாணவர்களை காத்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். தேவிபட்டினம் கடற்கரை போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விழிப்புணர்வு முகாமிற்கு மெரைன் கூடுதல் எஸ்பி பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் கனகராஜ், எஸ்ஐ அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேவிபட்டினம் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி முதல்வர் தீனதயாளன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!