தமிழகம்

உசிலம்பட்டி அருகே மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

81views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி தனியார் மண்டபத்தில் மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் பொதுமக்கள் மற்றும் மகளிர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழு மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தொழில் வாய்ப்பு மற்றும் அனைத்து வகையான வேலைகளுக்கும் மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனத்தில் இருந்து நிதி ஒதுக்கப்படுவது குறித்தும் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த எந்தெந்த நலத்திட்ட உதவிகள் உள்ளது என்பது குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு எம்.எஸ்.எம்.இ தலைவர் முத்துராமன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.இதில் மத்திய அரசின் திட்;டங்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.இந்நிகழ்ச்சியில்; தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் எம்.எஸ்.எம்.இ ப்ரோமோஷன் கவுன்சிலிங் அலுவலர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.இதில் பல்வேறு மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!