தமிழகம்

உசிலம்பட்டி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது.2 பேர் தப்பி ஓட்டம்

196views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னசெம்பட்டுபட்டி கிராமத்தின் மலை அடிவாரத்தில் காட்டுப்பன்றியை வேட்டையாடி வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து; உசிலம்பட்டி வனத்துறை அதிகாரி உத்தப்ப நாயக்கனூர் பகுதி வன காப்பர் ஆகியோர் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது முனியாண்டி என்பவர் வீட்டில் காட்டுப் பன்றி அடித்து சமையல் செய்து கொண்டிருந்ததை பார்த்த வனத்துறை அதிகாரிகள் முனியாண்டி மற்றும் இதில் தொடர்புடைய பாலமுருகன் என்பவரையும் கைது செய்து வனத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய பெருமாள் வசந்த் ஆகியோரை வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.இதில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய குற்றத்திற்காக 4-2020 செக்சன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்திய வன சட்டடம் 1902 பிரிவு 9 கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!