குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதிரொலியால் நாளை (நவ.18) மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. தென் கிழக்கு வங்காள விரிகுடா அந்தமான கடற்பகுதியில் நேற்று (நவ.16) முதல் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இது படிப்படியாக நகர்ந்து தென் மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நாளை (நவ. 18) முதல் நவ. 21 வரை தொடரக்கூடும்.
காற்றின் வேகம் மணிக்கு 45 கிமீ முதல் 65 கிமீ வரை வீசக்கூடும். இதனால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பிற்கிணங்க, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முதல் சூரங்காட்டுவலசை பகுதிகளில் உள்ள விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் நவ.18 முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் தங்கள் படகுகள், மீன்பிடி உபகரணங்களை கரையிலிருந்து எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்.
அலைகளால் விசைப்படகுகள் பாதிக்கா வகையில் போதிய இடைவெளியில் நங்கூரமிட்டு படகுகளை நிறுத்த வேண்டும் என மண்டபம் மீன்வளம் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெயிலானி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் பிரவீன் குமார் - 2021-ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. இப்படத்திற்கு இசையமைத்து...
நடிகர், இயக்குனர் டான்ஸ்மாஸ்டர் தயாரிப்பாளர் என பண்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் ஏற்கனவே பல நூறு ஆதரவு அற்ற குழந்தைகளை பராமரித்து அவர்களை சமுதாயத்தில் ஓரு...
ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஆன்மீகப் பயணமாக கம்போடியாவிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பிரதமர் திரு. ஹன் மானெட் சத்குருவை வரவேற்று, வாழ்த்தி எழுதிய...
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராசி அழகப்பன் எழுதியுள்ள சைக்கிள் நாவலை மையமாக கொண்டு May 3 ல் வெளிவரும் படம் குரங்கு பெடல். 70 80 காலகட்டங்களில்...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.