தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் நினைவுநாள் முன்னிட்டு அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த எம்.பி.

62views
வேலூர் அடுத்த காட்பாடியில் தமிழக முன்னாள் திமுக முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை நினைவுநாள் முன்னிட்டு வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல அலுவலகம் எதிரில் இருந்து வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தலைமையில் மெளன ஊர்வலம் நடந்தது.பின்பு சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணாசிலைக்கு எம்.பி.கதிர் ஆனந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் வேலூர் மாநராட்சி துணை மேயர் சுனில்குமார், பகுதி செயலாளர் வன்னியராக, மாநகராட்சி திமுக கவுன்சிலர் பீட்டா சரவணன், மாநகர ஆதிதிராவிட நல தலைவர் தேவநேசன், பிரம்மபுரம் பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணன், வட்ட செயலாளர் வள்ளலார் ரமேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!