தமிழகம்

பேரறிஞர் அண்ணாவுக்கு மௌன அஞ்சலி செலுத்திய அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் – திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் நடைபெற்றது.

50views
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் , இன்று கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா தலைமையும், துணை தலைவர் வளர்மதி முன்னிலையும் வகித்தனர். இதில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கு கொண்டனர்.
மேலும் இக்கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் மாதம் தோறும் கூட்டம் நடைபெறுவது வழக்கமானாலும், கூட்டத்தில் பேசிய கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றப்படாததை கண்டித்து பேசியதுடன் ,  அதிமுக ஒன்றிய கவுன்சிலர் மின்னல் கொடி, கடந்த மூன்று ஆண்டுகளாக தனது வார்டு பகுதிகளில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் எதையும் நிறைவேற்ற முடியாத காரணத்தினால், பலமுறை இது குறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் , எந்த நடவடிக்கையின்மையால் அடுத்த கூட்டத்தில் நிறைவேற்ற படாவிட்டால், தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.  மேலும் ஓருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு நிரந்தர கட்டிடம் அமைத்து தர கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த அலுவலகத்திற்கு 200க்கும் மேற்பட்ட மகளிர் குழுவினர் வந்து செல்வதால் தகுந்த பாதுகாப்பின்றி தற்காலிகமாக நிரந்தர கட்டிடத்தில் இயங்கி வருவது குறித்து திட்ட அலுவலர் தெரிவித்தார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!