தமிழகம்

வாடிப்பட்டியில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக மாலை அணிவித்து மரியாதை

44views
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அறிஞர் அண்ணா அவர்களின் 54 வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான மாண்புமிகு ஐயா ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் ஆணைக்கிணங்க மாவட்டச் செயலாளர் திரு கே .முருகேசன் அவர்கள் ஆலோசனையின் பேரில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் சேது சீனிவாசன், தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் திரவியம், ஜோதிமுருகன், ஆகியோர் முன்னிலையில் வாடிப்பட்டி முன்னாள் யூனியன் சேர்மன் துரை நடராஜன், கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நகரச் செயலாளர்கள் வெள்ளை கெங்கை, பாலமேடு சேகர், நவீன், ராமசாமி, மற்றும் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் அய்யாவு, இலக்கிய அணி வடக்கு மாவட்ட செயலாளர் சேகர், அம்மா பேரவை செயலாளர் நடராஜன், கிளைச் செயலாளர் கருப்பணன், தகவல் தொழில்நுட்ப அணி திருப்பதி, மாவட்ட விவசாய அணி செயலாளர் கருப்பட்டி செந்தில், இரும்பாடி ஊராட்சி செயலாளர் ஈஸ்வரன், குட்லாடம்பட்டி ராஜேந்திரன், உள்ளிட்ட நிர்வாகிகளும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!