தமிழகம்

தேனியில் நடைபெற்ற அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம்

57views
தேனியில் நடைபெற்ற அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் வரும் 18ஆம் தேதி மாவட்ட மாநாடு மற்றும் பிப்ரவரி 12ஆம் தேதி மாநில மாநாடு நடைபெறும் என கதிரவன் தகவல்.  தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் அகில இந்திய பார்வேர்ட் கட்சியின் மாநில தலைவர் கதிரவன் தலைமை தாங்கினார்.  இக்கூட்டத்தில் தமிழ் தேசிய பார்வேடு கட்சி பொதுச் செயலாளர் எம் பி எஸ் முருகன் தனது கட்சியிலிருந்து 100 க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தார்.
கூட்டத்தில் அகில இந்திய பார்வேர்ட் கட்சியின் மாநிலத் தலைவர் கதிரவன் பேசியதாவது:  நமது கட்சியில் பல்வேறு மாவட்டங்களில் ஒன்றியம் நகரம் வார்டு உறுப்பினர் என அனைத்து உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும் வரும் 18ஆம் தேதி மாவட்டம் மாநாடு நடைபெற உள்ளதாலும் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி மாநில மாநாடு மதுரை உசிலம்பட்டி ஆகிய ஏதோ ஒரு பகுதியில் மாநாடு நடைபெறும் என தெரிவித்தார் இந்த மாநாட்டிற்கு பத்தாயிரத்துக்கு மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கதிரவன் பேசினார்.  வரும் தேர்தலுக்கு நமது கட்சி ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றும் திராவிட கட்சியினர் இணைந்து தேர்தலை சந்திக்க போவதாக கதிரவன் தேனியில் பேசினார்.  நிகழ்ச்சியில் தேனி மாவட்ட செயலாளர் ஒன்றிய செயலாளர் நகரச் செயலாளர் மகளிர் அணி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!