தமிழகம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வந்தால் அடித்தட்டு மற்றும் பாமர மக்கள் நலன் பெறுவார்கள் உசிலம்பட்டியில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

207views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டம் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் தலைமையில், மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலையில் நடைபெற்றது, இதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வந்தால் அடித்தட்டு மற்றும் பாமர மக்கள் நலன் பெறுவார்கள் ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நட்டப்பட்டு வெறும் கனவுத் திட்டமாகவே இருந்து வரும் நிலையில் அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் ,உசிலம்பட்டி பகுதியில் மிகவும் வறட்சியான பகுதி அதன் அடிப்படையில் மக்களின் நலனுக்காக 58 கிராம கால்வாயில் நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும் உசிலம்பட்டி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான செட்டியபட்டி அருகே உள்ள பசுமாநதி அளவீடு செய்து தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் லட்சுமணன்,மாவட்ட துணைச் செயலாளர் லோகநாதன், மாவட்ட பொருளாளர் சின்னக்கோடி, மாவட்ட சட்ட ஆலோசகர் தவசி, உறுப்பினர்கள் தெய்வேந்திரன், காட்டுராஜா, சுருளிவேல், சித்தன், அக்னி, ஒச்சண்ணன், மதிவாணன், சுருளி, கண்ணன், பிரபு, ஜெகதீஸ்வரன், வினோத், அன்புராஜன், மணிகண்டன், பிரேம், மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு, அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!