தமிழகம்

கட்டிடத்தை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

172views
தேனி மாவட்டம் கோம்பை பேரூராட்சியில் தேவேந்திர குல வேளாளருக்கு பாத்தியப்பட்ட கட்டிடத்தை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வளரும் தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் தில் பிரசாத், மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் புதிய தமிழக மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் மாநிலத் துணை அமைப்புச் செயலாளர் பாலசுந்தராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் அய்யனார் மற்றும் முல்லை ரவி, பொறுப்பாளர் கோம்பை போரூர் கழக செயலாளர் லட்சுமணன், உத்தமபாளையம் ஒன்றிய செயலாளர் சோனை கருப்பசாமி மற்றும் ஆண்களும் பெண்களும் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் ஆக்கிரமிப்பை அகற்றியும் அதற்கு பட்டா வழங்கக் கோரியும் அரசு அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
செய்தியாளர் : A. சாதிக் பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!