தமிழகம்

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பிரபல ரவுடி ஜெயகுமார்(எ) கொக்கிகுமார் கொலை வழக்கில் ஒருவர் கைது .நண்பனாக இருந்து செல்போனை திருடியதால் தலையில் கல்லைப் போட்டு கொலை நடந்த சம்பவம்

119views
மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராதாராம் மகன் ஜெயகுமார் (வயது 29) பிரபல ரவுடியான ஜெயகுமார்(எ) கொக்கிகுமார் இவர் மீது நாகமலைபுதுக்கோட்டை காவல்நிலையத்தில் 4 வழிப்பறி, திருட்டு வழக்குகளும் செக்காணுரணி காவல நிலையத்தில் 3 வழிப்பறி வழக்குகள் உள்ளது.
திருமணமாகத ஜெயக்குமார் வேலைக்கு செல்லாமல் குடிபோதைக்காக வழிப்பறி, திருட்டு செயல்களில் ஈடுபட்டுவந்ததாக தெரிகிறது.  இந்நிலையில் நேற்று முன்தினம் நாகமலை புதுக்கோட்டை அரசினர் மாணவர் விடுதி வெளிப்புறத்தில் ஜெயக்குமார் விக்னேஷ் மற்றும் 3 பேர் குடிபோதையில் இருந்துள்ளனர்.  அப்போது ஜெயகுமார்  போதையில் இருந்த விக்னேஷ் மற்றும் நண்பர்கள் செல்போனை திருடி செக்கானூரணியில் விற்றதாக விக்னேஷ் சிற்கு தெரிய வந்தது.
இது குறித்து விக்னேஷ் மற்றும் நண்பர்கள் நேற்று இரவு செல்போன் விற்றது தொடர்பாக ஜெயக்குமாரிடம் கேட்டுள்ளனர்.  அப்போது ஜெயக்குமார் தகராறில் ஈடுபடவே ஆத்திரமடைந்த விக்னேஷ் ஜெயக்குமாரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து தப்பி ஓடினார்.  கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குபதிவு விசாரணை செய்தனர்.
மேலும் இறந்த கொக்கி குமார் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  போலீசார் விசாரணையில் நாகமலை புதுக்கோட்டை என் ஜி ஓ காலனியை சேர்ந்த சின்னப்பாண்டி மகன் விக்னேஷ் (வயசு 29) என்பவரை கைக செய்து வழக்கு பதிவு செய்தனர்.  வேலைக்கு செல்லாமல் குடிபோதைக்காக வழிப்பறி மற்றும் திருட்டில் ஈடுபட்ட நபர் நண்பர்களின் செல்போனை திருடிய செயலால் உயிரை பறி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!