தமிழகம்

வாணியம்பாடியில் மின்சாரம் தாக்கி திருமணமான பெண் உயிரிழப்பு

98views
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர்ஷகீல் அகமது (32) இவர் தற்போது வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இவருக்கு பர்வீன் (27) என்ற மனைவி மற்றும் 5 – மாதம் ஆன பெண் குழந்தை உள்ளது.  பர்வீன் சம்பவத்தன்று குளியல் அறையில் வெந்நீர் போட்ட ஹீட்டரை நிறுத்த முயற்சி செய்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.அவரின் அலறல் சத்தத்தை கேட்டு உறவினர்கள் கதவை உடைத்த உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது. இந்த சம்பவம் உறவினர் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!