தமிழகம்

குளியல் அருகே கீழே விழுந்து மரணம் அடைந்த முதியவர் இரண்டு நாட்களுக்குப் பின் வீட்டின் ஓட்டை உடைத்து வீட்டுக்குள் சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை

148views
மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி72 இவர் மதுரை கோச்சடையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் திருமணமாகவில்லை இவர் பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இவரும் மற்றும் இவர் சகோதரிகள் வசித்து வந்துள்ளார்கள் வயது மூப்பு காரணமாக சகோதரிகள் இறந்து விடவே இவர் மட்டும் தனிமையில் வீட்டில் வசித்து வந்துள்ளார்.  இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றுள்ளார்.  எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்தாரா அல்லது மாரடைப்பு ஏற்பட்டதா என தெரியவில்லை.  இந்த நிலையில் தினசரி அவர்கள் உறவினருக்கு whatsapp மூலமாக கொடுத்தவர்கள் தினசரி அனுப்புவார்.
கடந்த இரண்டு நாட்களாக அனுப்பவில்லை சந்தேகப்பட்ட உறவினர்கள் தொலைபேசி மூலமாகவும் அனைத்தும் எந்தவித அழைப்பும் ஏற்காத அதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் உறவினரின் நண்பரை விட்டு வீட்டில் போய் பார்க்க சொல்லிவிடுவார்கள்.  உள்புறம் பூட்டி இருப்பதை பார்த்து கதவை தட்டி உள்ளார்கள் அப்பொழுதும் கதவு திறக்காதே கண்டு சந்தேகமடைந்த உறவினர் நண்பர் மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலையத்திற்கு விரைந்த சுப்பிரமணியபுரம் காவல் காவல்துறையினர் வீட்டின் முன் பகுதியில் உள்ள ஓட்டை உடைந்து உள்புறம் பூட்டப்பட்டிருந்த கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்த பொழுது குளியல் அரை அருகே உயிரிழந்து கடந்து இருந்தார். ரவியின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது  குறித்து சுப்ரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!