தமிழகம்

மதுரையில் மேம்பாலத்தில் மது போதையில் அதிவேகமாக சென்ற இளைஞர் விபத்தில் சிக்கி படுகாயம்: போலீசார் விசாரணை

133views
மதுரை பைபாஸ் சாலையில் பழகானந்தத்தில் இருந்து எல்லிஸ் நகர் பகுதியை இணைக்கும் மேம்பாலத்தில் இன்று இரவு மது போதையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அஜித் (வயது 22) என்ற இளைஞர் நிலை தடுமாறி மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானார்.

தொடர்ந்து பலத்த காயமுற்று கிடந்தவரை அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும் மது போதையில் விபத்தில் சிக்கிய இளைஞரின் இருசக்கர வாகனத்தில் அனுமதி இல்லாத காவல் என்கின்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததை தொடர்ந்து மதுரை சுப்ரமணியபுரம் போலீசார் விபத்தில் சிக்கிய இளைஞர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!