தமிழகம்

காட்பாடியை சேர்ந்த 2 தொழிலாளிகள் உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதி உயிரிழப்பு வேலைக்கு சென்ற இடத்தில் பரிதாபம்

84views
வேலூர் மாவட்டம் காட்பாடி அரிக்கமேடு பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலாளிகள் சந்தோஷ்குமார் (28) ஆனந்த் (30) இருவரும் நேற்று முன்தினம் மத்தியம்கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மடப்பட்டு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் ஒன்றில் ஹலோ பிளாக் கற்கள் பதிக்கும் வேலை செய்துவந்தனர்.
2 பேரும் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையின் ஓரம் பேசிக்கொண்டு இருக்கும் போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று இவர்கள் மீது மோதியது.
படுகாயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். உடல்களை திருநாவலூர் காவல்துறையினர் கைப்பற்றி விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காட்பாடி பகுதியிலிருந்து கூலி வேலைக்கு சென்ற இவர்கள் உளுந்தூர்பேட்டையில் விபத்தில் உயிரிழந்தது உறவினர் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!