தமிழகம்

மதுரை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் இறங்க முயன்ற பயணி தவறி ரயிலுக்கு அடியில் சென்றதால் பரபரப்பு

335views
மதுரை ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வது வழக்கம், குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் மதுரை ரயில் நிலையம் வந்தது இந்த நிலையில் இன்று நண்பகல் ரயில் நிலையத்திற்கு வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரை ரயில் நிலையத்திற்குள் வந்து கொண்டிருந்தது ரயில் நிற்பதற்கு முன்னே பயணம் செய்த ரயில் கீழே இறங்க முயன்ற போது அப்பொழுது கேரள மாநிலத்தைச் மலப்புரத்தைச் சேர்ந்த சேர்ந்த தினேஷ் என்பவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து ரயிலுக்கு அடியில் சென்றுள்ளார்.
உடனே பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே இருப்புப்பாதை போலீசார் துரிதமாக செயல்பட்டு பயணியை மீட்டுள்ளனர். மேலும் பயணியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஓடும் ரயிலில் இறங்க முயன்ற சென்ற பயணி தவறி விழுந்து அடிபட்ட சம்பவம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!