தமிழகம்

உசிலம்பட்டியில் அரசு பேருந்து தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியரகள் சங்கம் சார்பில் பாட்டு பாடி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

62views
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்க ஆலோசனை வழங்குவதற்கான நிறுவனத்தை தேர்வு செய்வதற்காக தமிழக அரசு சார்பில் ஒப்பந்தபுள்ளி வெளியிடப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பேருந்து நிலையம் உள்ளே மற்றும் மதுரை ரோட்டிலுள்ள அரசு பேருந்து பணிமனை எதிரே மற்றும் பாட்டு பாடி நடனம் ஆடி நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் பேரையூரிலும் பேருந்து நிலையம் எதிரே சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!