தமிழகம்

மோடி அரசை கண்டித்து தென்காசி எம்எல்ஏ தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

69views
தென்காசி மாவட்டத்தில் ஒன்றிய மோடி அரசை கண்டித்து எம்எல்ஏ பழனிநாடார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கிகளில் கடன் மோசடியில் ஈடுபட்ட அதானி குடும்பத்தை கண்டித்தும், அதானி குடும்பத்திற்கு உடந்தையாக செயல்பட்ட ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான எஸ். பழனி நாடார் தலைமை வகித்தார். நகர தலைவர் மாடசாமி ஜோதிடர், மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ்,மாநில நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் சங்கர குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சட்டநாதன், ஜேம்ஸ், முத்துசாமி, தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதய கிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர்கள் திருஞானம், சிவராமகிருஷ்ணன், சுரண்டை சேர்மன் வள்ளி முருகன், கிளங்காடு மணி, குத்தாலிங்கம், சண்முகவேல், முகம்மது உசேன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஏஜிஎம்.கணேசன், காஜாமைதீன், சபரி முருகேசன், நகர தலைவர்கள் ராமர், எஸ்.கே.டி ஜெயபால், சுந்தரபாண்டியன், முப்புடாதி, அபூபக்கர் சித்திக், வட்டாரத் தலைவர்கள் பெருமாள்,கார்வின் தங்கரத்தினம், ஜெகநாதன், குமார் பாண்டியன், கணேசன், சந்தோஷ்,ரமேஷ் சித்திக், ஈஸ்வரன், பேச்சாளர்கள் ஆலடி சங்கரைய்யா, பால் துரை, கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், பூமா தேவி, ரபீக், மாவட்ட செயலாளர்கள் கண்ணன், கோவிந்தராஜ், லட்சுமணன், தேவராஜன் மாடசாமி சுரண்டை பிரபாகரன், தேவேந்திரன், மகளிர் காங்கிரஸ் சேர்மக்கனி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!