பிரிட்டன் அமைச்சர்கள் இணைந்து பிரான்சை சிவப்புப் பட்டியலில் சேர்க்க ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் அமைச்சர்கள் பீட்டா கொரனோ வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பிரான்சை சிவப்புப் பட்டியலில் இணைப்பது தொடர்பில் ஆலோசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரிட்டன் அரசு மிகவும் அதிக விதிமுறைகளை கடைபிடிக்கும் நாடுகளை சிவப்புப் பட்டியலில் வைத்திருக்கிறது.
அந்த நாடுகளுக்கு செல்லும் பிரிட்டன் மக்கள் நாடு திரும்பியவுடன் அரசு நியமித்திருக்கும் ஓட்டலில் தனிமைப்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரிட்டனின் மிக ஆபத்தான நாடுகளுக்கான பட்டியலில் பிரான்ஸ் இருக்கிறது. இந்நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டை ஆம்பர் பட்டியலிலிருந்து சிவப்புப் பட்டியலில் இணைப்பது தொடர்பில் தான் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.