உலகம்

ஏழை நாடுகளுக்கு 10 கோடி தடுப்பூசிகள். ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்புதல்!

175views

ழை நாடுகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

கொரோனா முதல் அலை ஒய்ந்த நிலையில் இப்போது இரண்டாம் அலை மிக வேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை முழுவதுமாக எதிர்கொள்ள தடுப்பூசி ஒன்றே அத்தியாவசியமாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது வரை கொரோனா தடுப்பூசிகள் எல்லாம் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளுக்கே அதிகளவில் கிடைத்து வருகின்றன.

இதையடுத்து ஏழை நாடுகளுக்கு இந்தாண்டு இறுதிக்குள் 10 கோடி தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!