தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது. முதற்கட்டமாக 4. 82 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவமனக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தால் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருவதால், ஸ்டெர்லை ஆலை தாமாகவே முன்வந்து, ஆக்சிஜன் தயாரிப்பதாக உச்சநீதிமன்றத்தில் அனுமதி கேட்டது. ஆனால் தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையினை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கே ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்கப்படும் என்ற உறுதியோடு அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம்.
இதையைடுத்து ஆக்சிஜன் தயாரிப்பதற்கான வேலைகள் நடந்து வந்தன. நேற்று இரவு முதல் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது 4.82 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.
டேங்கர் லாரிகளில் சென்ற ஆக்சிஜனை கொடி அசைத்து தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் அனுப்பி வைத்தார். இந்த திரவ ஆக்சிஜன் 98 சதவிகிதம் சுத்தமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இனிவரும் நாட்களில் தினமும் 35 டன் திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் ஸ்டெர்லைட் ஆலை என்று கூறப்படுகிறது.
92views
You Might Also Like
சந்திப்பு
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை மரியாதை நிமித்தமாக அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி செயலாளர் வைர தேவர் சந்தித்தார்....
வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெறுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய மக்களின் மத உணர்வுகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்கிற...
55 வது கல்லூரி நாள்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில், 55 வது கல்லூரி நாள் 09.04.2025 அன்று நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார்....
தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்க வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் ரமேஷ் தலைமையில் வேலூர் அடுத்த சத்துவாச்சாரி வள்ளலாரில் உள்ள சங்க அலுவலகத்தில்...
வேலூர் காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரி மற்றும் காவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் மதிவாணன், பணமுடிப்பு மற்றும் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். செய்தியாளர்: வேலூர்...