தமிழகம்முக்கிய செய்திகள்

வெற்றியை பிரதமர் கைகளில் ஒப்படைப்பேன்: குஷ்பு

328views

”தேர்தலில், மிக பெரிய வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கைகளில் ஒப்படைப்பேன்,” என, ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க, வேட்பாளரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “பிரதமர் மோடி, நாட்டிற்கு உழைப்பதை பார்த்து, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு, பா.ஜ.க,வில் இணைந்தேன். இவ்வளவு சீக்கிரத்தில், எனக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என, எதிர்பார்க்கவில்லை.

இதற்காக, கட்சி தலைமைக்கு நன்றி. ஆயிரம் விளக்கு தொகுதியில், நிச்சயமாக மிக பெரிய வெற்றி பெறுவேன். அதை, மோடி, அமித்ஷா, பா.ஜ.க, தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் கைகளில் ஒப்படைப்பேன். இங்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களுக்கு சென்று, பா.ஜ.க,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்.

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ‘வாஷிங் மிஷன்’ வழங்க இருப்பதாக அறிவித்ததை வரவேற்கிறேன். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு, நல்லது செய்வதில், எந்த தவறும் இல்லை. அவர்களுக்காக சிறப்பு திட்டங்களை, அரசு செயல்படுத்துவது தான் முக்கியம்” என்று தெரிவித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!