சினிமா

விரைவில் திரைக்கு வருகிறது சர்வ தேச விருதுகளை பெற்ற படம் ‘ஆக்குவாய் காப்பாய்’

22views
பல சர்வ தேச விருதுகளை பெற்ற படம் ஆக்குவாய் காப்பாய். விரைவில் திரைக்கு வருகிறது. உலக திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்த ‘ஆக்குவாய் காப்பாய்’
பங்கேற்ற திரைப்பட விழாக்கள்:
– டொராண்டோ திரைப்பட விழா
– கேன்ஸ் திரைப்பட விழா
– பெர்லின் திரைப்பட விழா
– சன்டான்ஸ் திரைப்பட விழா
– வெனிஸ் திரைப்பட விழா
– அந்தால்யா திரைப்பட விழா
– லண்டன் ஃபிலிம் வீல்
– சான் செபாஸ்டியன் சர்வதேச திரைப்பட விழா
– ஸ்லாம்டான்ஸ் திரைப்பட விழா
கனடாவில் வாழும் ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆக்குவாய் காப்பாய்’.
ஆர். புரொடக்ஷன்ஸ் மற்றும் லூனார் மோஷன் பிக்சர்ஸ் AVP சினிமாஸ் புகழ்ஆகியோருடன் இணைந்து இப்படத்தை ஆர். முத்துக்குமார் தயாரித்துள்ளார்.
பலமுறை மேடையேறி ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற ‘அரங்கடல்’ என்ற நாடகத்தைத் தழுவியே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நாடகத்தை நாடக ஆசிரியர் சகாப்தன் எழுதியுள்ளார். திரைப்பட வடிவத்திற்கு ஏற்றவாறு சில மாற்றங்களுடன் முழுநீள திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
சகாப்தன் எழுதிய கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் மதிவாசன். இவர் கனடாவில் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகரும் ஆவார்.
கதையின் கரு:
கனடாவில் விபத்துக்குள்ளாகி கோமா நிலையில் இருக்கும் தனது கணவரை ஆறு ஆண்டுகளாகப் பராமரித்து வருவதோடு, ஆறு வயது மகளையும் பல்வேறு வாழ்க்கைப் போராட்டங்களுக்கு மத்தியில் வளர்த்து, கல்வி கற்பித்து வரும் ஒரு பெண்ணின் வாழ்க்கையே இப்படத்தின் மையக்கரு.
உறவினர்கள் மற்றும் நண்பர்களின் தவறான பார்வைகளையும், வாழ்க்கைச் சவால்களையும் எதிர்கொண்டு அவர் எவ்வாறு முன்னேறுகிறார் என்பதையே படம் உணர்வுபூர்வமாகச் சித்தரிக்கிறது. ஒரு பெண் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அவளது துயரங்களும் போராட்டங்களும் தொடர்கின்றன என்ற கருத்தை வலியுறுத்தும் படைப்பாக இது உருவாகி உள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!