தமிழகம்

இயற்பியல் கருத்தரங்கம்

26views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, இயற்பியல் துறை சார்பாக 14.03.2025 அன்று இந்தியா காலநிலை அறிவியலை எதிர்த்து போராடுமா? என்னும் தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் மற்றும் துறைத்தலைவர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் கழகம், மேனாள் தலைவர் மற்றும் மதுரை கல்லூரி, விலங்கியல் துறைத்தலைவர் தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் தமிழ்நாடு அறிவியல் கழகம், மாவட்ட செயலாளர் ஆரோக்கிய சாமி மற்றும் தலைவர் சாஸ்தா சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உதவிப்பேராசிரியர் காஜா முஹைதீன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவிப்பேராசிரியை ஹெலன் உடன் இணைந்து துறைசார் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!