தமிழகம்

பன்னாட்டு கருத்தரங்கம்

34views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, வணிகவியல் (கணிப்பொறி பயன்பாடு) துறை சார்பாக 12.03.2025 அன்று நிலையான வணிகத்தில் நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் என்னும் தலைப்பில் மூன்றாவது பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. துறைத்தலைவர் நாசர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் கருத்தரங்கத்தை துவக்கிவைத்து தலைமையுரையாற்றினார். காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், நிறுவன செயலாண்மை துறைத்தலைவர், மூத்த பேராசிரியர் வேதிராஜன் அவர்கள் பேசினார். கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா வாழ்த்துரை வழங்கினார்.
முதல் அமர்வில் உதவிப்பேராசிரியர் அருள் சேவியர் விக்டர் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக ஸ்ரீலங்கா, ஜப்னா பல்கலைக்கழகம், மேலாண்மை மற்றும் வணிகவியல் துறைத்தலைவர், சிவேசன் சிவானந்தமூர்த்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். உதவிப்பேராசிரியை ஞானசௌந்தரி ஒருங்கிணைத்தார்.
இரண்டாம் அமர்வில் உதவிப்பேராசிரியர் நாகஜோதி சிறப்புவிருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி, பாரதிதாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நிறுவன செயலாண்மை துறை, இணைப்பேராசிரியர், மரியா இனிகோ கலந்துகொண்டு டிஜிட்டல் பணப்பரிவர்தனைகள் குறித்து பேசினார். உதவிப்பேராசிரியை வெண்ணிலா ஒருங்கிணைத்தார். காலை அமர்வை உதவிப்பேராசிரியை பிரோஜா நஸ்ரின் நன்றி கூறினார்.
மூன்றாம் அமர்வில் காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், நிறுவன செயலாண்மை துறைத்தலைவர், மூத்த பேராசிரியர் வேதிராஜன் நவீன வணிகத்தில் டிஜிட்டல் மாற்றங்கள் மற்றும் வணிக நிலைநிறுத்தல் குறித்து சிறப்புரையாற்றினார். உதவிப்பேராசிரியை கௌரி ஒருங்கிணைத்தார். உதவிப்பேராசிரியை ஞான பிரசனாம்பிகை நன்றி கூறினார்.
நிறைவு விழாவில் புதுச்சேரி, பாரதிதாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நிறுவன செயலாண்மை துறை, இணைப்பேராசிரியர், மரியா இனிகோ அவர்கள் நிறைவு விழா உரை நிகழ்த்தினார். கருத்தரங்கில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்த மாணவ-மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இறுதியாக உதவிப்பேராசிரியை தீபிகா நன்றி கூறினார். துறைசார் பேராசிரியர்கள் நிகழ்ச்சி ஏறப்டுகளை செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!