தமிழகம்

இராமநாதபுரம் பஸ் நிலையத்தில் கிழிந்து தொங்கும் தகவல் பலகை : அரசு நடவடிக்கை எடுக்குமா ?

135views
இராமநாதபுரம் :
இராமநாதபுரம் பஸ் நிலையம் மாவட்ட தலைநகரில் உள்ள மிகவும் முக்கியமான பஸ் நிலையம் ஆகும்.  இந்த பஸ் நிலையம் வழியாக மதுரை, இராமேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
இங்குள்ள பஸ் நிலையத்தில் பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பஸ்களின் விபரங்கள் குறித்த தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. எனினும் முதுகுளத்தூர் செல்லும் தகவல் பலகை மட்டும் கிழிந்து தொங்கி வருகிறது. இதனை சரி செய்ய போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!