தமிழகம்

தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த ஶ்ரீவரசித்தி விநாயகர்

106views
வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை ரோடு, காமராஜர் வீதியில் ஶ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மாலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து ஶ்ரீவரசித்தி விநாயகருக்கு தங்கக்கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஶ்ரீவரசித்தி விநாயகரை வழிபட்டனர். பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது.  பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஶ்ரீஜெயக்குமார் குருக்கள் விமரிசையாக செய்திருந்தார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!