தமிழகம்

கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதைக் கண்டித்து உசிலம்பட்டியில் பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

244views
தமிழக அரசு கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் செயல்படும் கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.இதற்கு தென்மாவட்டங்களில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு தமிழ்நாடு பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன.முன்னதாக அரசாணையை ரத்து செய்யக்கோரி வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் உசிலம்பட்டி தேவர் சிலையிலிருந்து ஊர்வலமாக வந்து முருகன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!