மனிதநேய வார நிறைவு விழாவில், 66 பயனாளிகளுக்கு ரூ.51.16 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வழங்கினார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற மனிதநேய வார நிறைவு விழா நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில், மனித நேயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும், தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தில் மனித நேய நாளாகவும் மற்றும் தீண்டாமை ஒழிப்பு தினமாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் எவ்வித பாகுபாடுன்றி ஒற்றுமையுடனும் மனிதநேயத்துடனும் வாழ்ந்திடும் பொருட்டு, மனிதநேய வார நிறைவு விழா பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மனிதநேயத்தை எல்லோரும் சரியாக கடைப்பிடித்தால், சமுதாயத்தில் பாகுபாடு என்ற நிலை முற்றிலும் ஒழிக்கப்படும். அதை ஒவ்வொருவரும் உணர்ந்து, மனிதநேயத்தை உறுதிப்படுத்தும் விதமாக தீண்டாமையை அகற்றி நல்லிணக்கத்துடன் வாழவேண்டும். அதேபோல் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கும் முன்வர வேண்டும். அப்பொழுதுதான் மனிதநேயம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பயன்பெறும். எனவே எவ்விதப்பாகுபாடின்றியும், எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் உதவி செய்யும் எண்ணம்தான் மனித நேயத்திற்கு அடிப்படையாக திகழும். அதை ஒவ்வொருவரும் உறுதிப்படுத்தும்விதமாக செயல்பட்டு ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்திட வேண்டும்.
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கப்பெறவேண்டும் என்ற அடிப்படையில், ஜக்கிய நாடுகளை சார்ந்த அனைத்து நாடுகளிலும்; இலக்கீடுகளை நிர்ணயித்து 2030-க்குள் அதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அதனடிப்படையில் ஒன்றியம் மற்றும் மாநில அரசின் சார்பில் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்ச்சியில் மனிதநேயம் குறித்து பள்ளி மாணவ மாணவியர்கள் தங்களின் போச்சுத்திறன் வாயிலாக விரிவாகவும், சிறப்பாகவும் இங்கு எடுத்துரைத்தனர். இதனை கருத்தில் கொண்டு, எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் சமம் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் மனித நேயத்துடன் செயல்பட்டு, பிறருக்கு உதவிடும் மனப்பான்மையினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
இவ்விழாவில், 58 பயனாளிகளுக்கு ரூ.33.65 இலட்சம் மதிப்பீட்டில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தீருதவித்தொகைக்கான ஆணைகளையும் மற்றும் 8 பயனாளிகளுக்கு ரூ.17.51 இலட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமமனைப்பட்டாக்களையும், பள்ளிகள் அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, நடனப்போட்டி, மாறுவேட போட்டி, தனித்திறன்போட்டிகள், மௌன நடிப்பு போட்டிகள் ஆகிய போட்டிகளில் பங்கேற்று முதல் 3 இடங்களைப் பெற்ற அதிகரம் மற்றும் உஞ்சனை அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி, மல்லல் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, மல்லல் அதிகரம் மற்றும் உஞ்சனை அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி, சேர்ந்த 69 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ந.மங்களநாதன், அரசு வழக்கறிஞர் (வன்கொடுமை) துஷாந்த் பிரதீப்குமார், ஆதிதிராவிடர் நலக்குழு, விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு, தூய்மை பணிபுரிவோர்களுக்கான கண்காணிப்புக்குழு, ஆகிய குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்கள் திரு.எல்.ஆறுமுகம், அ.பூமிநாதன், மலைச்சாமி, செல்வக்குமார், ந.பிச்சை, மற்றும் க.பொன்னுச்சாமி, விடுதிகாப்பாளர்கள், மாணவ மாணவியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
RAYRISES என்பது ஆவணப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி, அம்சங்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்காக முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட முழு-சேவை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். தேசிய வர்த்தக இடங்கள்...
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.