மதுரை மாநகராட்சி சம்மட்டிபுரம் பகுதியில் வரி வசூல் செய்யும் மையத்தில் வேலை செய்து வரும் பி.பி.சாவடி திருமலை காலனி பகுதியை சேர்ந்த துரைராஜ் மகன் சரண்ராஜ் என்பவரை நேற்று மாலை பெரியார் பேருந்து நிலையம் அருகே வைத்து சிலர் காரில் கடத்தி சென்றதாக அவரது மனைவி வினிதா மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரை பெற்று கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றும் சந்திரன் என்பவருக்கும், மதுரை மாநகராட்சியில் பில் கலெக்டராக தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் சரண்ராஜ்யிடம் தனது மருத்துவமனைக்கு மாசுகட்டுப்பட்டு தடையில்லா சான்றிதழ் பெற்று தரவேண்டி கடந்த 2021 ஆம் ஆண்டு 1 லட்சத்தி 10 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும், அது தொடர்பாக எந்தவித சான்றிதழ் லும் பெற்று தராமலும், பணத்தை திருப்பி தராமலும் சரண்ராஜ் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனக்கு கொடுக்க வேண்டிய ஒரு லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் பணத்திற்காக மாநகராட்சியின் தற்காலிக பணியாளர் சரண்ராஜ்-யை மருத்துவர் கடத்தி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் இன்று உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவர் சந்திரனின் சொந்த மருத்துவமனையில் கடத்தி வைத்திருந்தாக கூறப்பட்ட சரண்ராஜ்-யை மீட்ட போலிசார் அரசு மருத்துவர் சந்திரன், மேலாளர் கண்ணதாசன், மருத்துவமனை ஊழியர் அருண்பாண்டியன் உள்ளிட்டோரை உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் அழைத்து முதற்கட்ட விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து சரண்ராஜ்-யை கடத்திய மருத்துவமனை மேலாளர் கண்ணதாசன் மற்றும் ஊழியர் அருண்பாண்டியன் இருவரையும் கைது செய்த திடீர்நகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
RAYRISES என்பது ஆவணப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி, அம்சங்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்காக முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட முழு-சேவை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். தேசிய வர்த்தக இடங்கள்...
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.