தமிழகம்

2023 தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பானது அனைத்து நியாய விலை கடைகளில் நேற்று வழங்கப்பட்டது

102views
தமிழக அரசு பொங்கல் தொகுப்புக்காக ரேஷன் அரிசி அட்டைதாரருக்கு ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சீனி 6 அடி உயரம் கொண்ட முழு நீலக்கரும்பு ஆகியவற்றை இன்று முதல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது இதற்காக நியாய விலைக் கடை ஊழியர்கள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பே வீடு வீடாக சென்று டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு குறிப்பிட்ட ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் தேதியில் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசானது அறிவிப்பை வெளியிட்டது. அதில் அடிப்படையில் இன்று முதல் மதுரை மாநகரில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பாக ரூபாய் ஆயிரம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை வழங்கப்பட்டது.   முதல் ஒரு பகுதியாக மதுரை பழங்காநத்தம் பசுமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு தொடக்க சங்கம் நியாய விலை கடையில் மதுரை மாநகராட்சி 70 வது வார்டு கவுன்சிலர் அமுதா தவமணி பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினர் இதில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் சுரேஷ் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர் பொதுமக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவேளையை பின்பற்றி பொங்கல் தொகுப்பினை பெற்று சென்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!