தமிழகம்

கல்லூரி மாணவிகளுக்கு நெல் பயிர் நடவு செய்யும் முறை பயிற்சி

131views
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டாரத்தில் கவிதா (47 வயது) பெண் விவசாயி தன் வயலில் நெற்பயிரினை வளர்த்து நாற்றங்காலாக விற்பனை செய்து வருகின்றார்.இங்கு பல்வேறு இடங்களில் உள்ள விவசாயிகள் நேரடியாக வந்து வாங்கி சென்று தனது வயல்களில் நடவு செய்து வருகின்றனர்.விதை ஆய்வு துணை இயக்குநர் திருமதி செல்வமணி அவர்கள் தங்கள் குழுவுடன் இணைந்து அங்கு உள்ள நாற்றங்காலின் தரத்தினை ஆய்வு செய்தார்.. இந்நிகழ்வில் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு நாற்றங்கால் தரம் ஆய்வு செய்வது குறித்து கேட்டறிந்தனர்.மேலும் விற்பனைக்கு தயாரக உள்ள நாற்றாங்காலினை வேலையாட்களுடன் இணைந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் : ரா. மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!