தமிழகம்

எழுமலைப் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பெண்கள் கைது.22 கிலோ கஞ்சா பறிமுதல்

225views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எலுமலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுரை தனிப்படை பிரிவு போலிசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்ததின் அடிப்படையில் போலிசார் சோதனையில் ஈடுபட்ட போது எழுமலை அருகே மானூத்து முனியாண்டி கோவில் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த பெண்களைப் பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக எழுமலை அருகே மானுத்தை சேர்ந்த பாண்டியின் மனைவி பவுன்தாய்(50) ,வீரா மனைவி பேச்சியம்மாள்(55), பாஸ்கர் மனைவி பேச்சியம்மாள்(45). ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த மூன்று பெண்களையும் கைது செய்து அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து எழுமலை போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!