மதுரை மாநகராட்சி புதிய கழிவுநீர் உறிஞ்சு வாகனங்களை மேயர் இந்திராணி பொன்வசந்த், பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தில் திரவக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு புதிய கழிவுநீர் உறிஞ்சு வாகனங்களை மமேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், ஆகியோர் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணியின் கீழ் சாலைகள் அமைத்தல், மழைநீர் வடிகால்கள், பாதாளச்சாக்கடை பணிகள், தெருவிளக்குகள் பராமரித்தல், தூய்மை பணிகள், கால்வாய்கள் தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் உள்ள பாதாளச் சாக்கடைகளில் அடிக்கடி அடைப்புகள் ஏற்படுகிறது. இவ்வடைப்புக்களை சரிசெய்வதற்கு மாநகராட்சியில் நான்கு கழிவுநீர் உறிஞ்சு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பாதாளச்சாக்கடை அடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்வதற்கு கூடுதலாக இரண்டு கழிவுநீர் உறிஞ்சு வாகனங்கள்; (சுமார் 6000 லிட்டர்) 15வா ஊகுஊ திட்டத்தின் கீழ் ரூ.67.70 இலட்சம் மதிப்பீட்டில்; வாங்கப்பட்டுள்ளது. புதிதாக வாங்கப்பட்டுள்ள கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்களை, மேயர், ஆணையாளர் ஆகியோர் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
இந்த புதிய கழிவுநீர் உறிஞ்சு வாகனத்தின் மூலம் மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பாதாளச் சாக்கடைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் விரைந்து சரிசெய்யப்படும். இந்நிகழ்வில், துணை மேயர் தி.நாகராஜன், நகரப்பொறியாளர் அரசு, மண்டலத் தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி பொறியாளர் தியாகராஜன், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
RAYRISES என்பது ஆவணப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி, அம்சங்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்காக முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட முழு-சேவை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். தேசிய வர்த்தக இடங்கள்...
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.