தமிழகம்

முதலைக்குளம் கம்ப காமாட்சி கருப்பசாமி கோவில் பெரிய கண்மாய்க்கு பொதுமக்கள் சார்பில் மீன் குஞ்சுகள் வாங்கி விடும் நிகழ்ச்சி நடைபெற்றது

169views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பழமை வாய்ந்த முதலைக்குளம் கம்ப காமாட்சி கருப்பசாமி கோவில் பெரிய கம்மாயில் வருடம் ஒருமுறை பொதுமக்களால் வாங்கி விடப்படும். மீன்கள் குஞ்சுகள் நன்கு வளர்ந்த பின் வருடம் ஒரு முறை கருப்பசாமி கோவில் நேர்த்திக்கடனாக மீன் பிடித்த திருவிழா நடைபெறும்.
இந்த திருவிழாவின்போது உசிலம்பட்டி மதுரை தேனி திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் மீன்களை பிடித்து சாப்பிட்டால் கருப்பசாமி அருள் கிடைக்கும் தீராத நோயும் தீர்ந்துவிடும் எனும் ஐதீகம் உள்ளது. இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் நேர்த்திக்கடனாக மீன் குஞ்சுகள் வாங்கி விடுவார்கள். அதேபோல் இன்று தாய்கிராமமான முதலைக்குளம் தேவர் புரட்சி படை கபடி குழு , இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக மீன் குஞ்சுகள் விடப்பட்டது. இதில் ஏராளமான ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் உடன் இருந்தனர்
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!